ஜனவரி மாதத்தில் வா வாத்தியார் படத்தை வெளியிட திட்டம் | 'சித்தார்த் 40' படத்தில் இசையமைப்பாளராக இணைந்த பாம்பே ஜெயஸ்ரீ மகன் | வீர தீர சூரன் படத்திலிருந்து வெளிவந்த துஷாரா விஜயன் பர்ஸ்ட் லுக் | பிரியங்கா சோப்ரா கதை : துஷாரா ஆசை | அதிக படங்கள் நடிக்காததற்கு உடல்நல குறைவு தான் காரணம் : துல்கர் சல்மான் | மகிழ்ச்சியை உணர வெளியில் இருந்து உதவியை எதிர்பார்க்காதீர்கள் : மஞ்சு வாரியர் | ரசிகர் கொலை வழக்கு : நடிகர் தர்ஷினின் ஜாமீன் மனு மீண்டும் நிராகரிப்பு | பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் கிச்சா சுதீப் | அஜித்திற்கு போட்டியாக களம் இறங்கிய கீர்த்தி சுரேஷ் | வேட்டையன் படத்தில் நானி நடிக்க மறுத்தாரா? |
மலையாள திரையுலகில் நடிகர் மம்முட்டியின் மகனாக ஒரு வாரிசு நடிகராக அறிமுகமானாலும் தனது துள்ளலான நடிப்புத் திறமையால் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கி வைத்துள்ளவர் நடிகர் துல்கர் சல்மான். அதனால் மலையாளத்தையும் தாண்டி தன் தந்தையை போலவே தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என தனது நடிப்பு எல்லையை விரிவுபடுத்தியுள்ள துல்கர் சல்மான் ஒவ்வொரு மொழியிலும் சீரான இடைவெளியில் படங்களில் நடித்து வந்தார். ஆனால் கடந்த வருடம் மலையாளத்தில் அவர் நடித்த கிங் ஆப் கொத்த திரைப்படம் வெளியாகி ஒரு வருடம் ஆகிவிட்டது. சமீபத்தில் வெளியான கல்கி திரைப்படத்தில் கூட ஒரு சிறப்பு தோற்றத்தில் மட்டுமே நடித்திருந்தார் துல்கர் சல்மான்.
அவர் தமிழில் நடித்துள்ள லக்கி பாஸ்கர் திரைப்படம் கூட முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்த நிலையில் அவர் வேறு எந்த படங்களிலும் நடிக்க ஒப்புக்கொள்ளவும் இல்லை. இது திரையுலகில் மட்டுமல்ல ரசிகர்களிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் எதனால் இந்த இடைவெளி என்பது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் துல்கர் சல்மான்.
“படங்களில் நடிப்பதிலேயே கவனத்தை செலுத்தியதால் என் உடல் நிலையில் கொஞ்சம் அக்கறை காட்ட தவறிவிட்டேன். சில உடல் நல குறைபாடுகள் காரணமாகத்தான் நடிப்பதற்கு தற்காலிக இடைவெளி விட்டுள்ளேன். இது யாருடைய தவறும் அல்ல. எனக்கு ஒரு சிறிய இடைவெளி தேவைப்பட்டது. அவ்வளவுதான்” என்று வெளிப்படையாகவே கூறியுள்ளார்.