லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? | ஆண் ஆதிக்கம் இருப்பது கசப்பான உண்மை : கீர்த்தி சுரேஷ் |

சில வாரங்களுக்கு முன்பு கேரளாவில் வெளியான நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை மலையாள திரையுலகில் நடிகைகள் பலர் பாலியல் ரீதியாக சந்திக்கும் தொந்தரவுகள் குறித்து வெளிச்சம் போட்டி காட்டியது. இதைத் தொடர்ந்து நடிகைகள் பலரும் திரையுலகில் பிரபலமாக இருக்கும் நடிகர்கள், இயக்குனர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு புகார்களை கூறி வருகின்றனர்.
அந்த வகையில் நடிகை ஒருவர், பிரபல குணசித்திர மற்றும் வில்லன் நடிகர் ஆன நடிகர் சித்திக் மீது திருவனந்தபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். கேரள நீதிமன்றம் அவருக்கு முன் ஜாமீன் வழங்க மறுத்த நிலையில் சில நாட்கள் தலைமறைவாக இருந்த சித்திக் உச்ச நீதிமன்றத்தை நாடி தன்னை கைது செய்வதற்கான இடைக்கால தடை உத்தரவை பெற்றார்.
அதேசமயம் உச்சநீதிமன்றம் போலீஸ் விசாரணைக்கு சித்திக் ஒத்துழைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது. இதனை தொடர்ந்து தற்போது சித்திக்கிடம் போலீசார் இந்த வழக்கு குறித்து விசாரித்து வருகின்றனர். இரண்டு நாட்களாக நடந்த இந்த விசாரணையின்போது பெரும்பாலும் சித்திக் எந்த கேள்வி கேட்டாலும் தனக்குத் தெரியாது அல்லது ஞாபகம் இல்லை என்பது போல திருப்பித் திருப்பி பதில்களை கூறி வருகிறாராம். இதனால் போலீசார் அவர் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாக கூறி அவரது ஜாமீனை ரத்து செய்து அவரை கைது செய்து விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளார்கள் என்று போலீசார் தரப்பில் செய்தி வெளியாகி உள்ளது.




