எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் | உங்களை ஏமாற்ற மாட்டேன் லாலேட்டா : மோகன்லால் மகளை அறிமுகப்படுத்தும் இயக்குனர் உறுதி | சினிமாவில் ஒரு வட்டத்துக்குள் சிக்க விரும்பவில்லை: கிரேஸ் ஆண்டனி | சுரேஷ் கோபி பட சென்சார் விவகாரம் : சனிக்கிழமை படம் பார்க்கும் நீதிபதி | கவுதம் ராம் கார்த்திக் படத்தில் இணையும் பிரபலங்கள் | மீண்டும் ஒரு லெஸ்பியன் படம் | வரி உயர்வு : ஆகஸ்ட் முதல் படங்களை வெளியிடப் போவதில்லை : புதுச்சேரி விநியோகஸ்தர்கள் அறிவிப்பு | இங்கே ஹோம்லி, அங்கே கவர்ச்சி : ராஷ்மிகாவின் அடடே பாலிசி | பிளாஷ்பேக்: வசுந்தரா தாசை நிராகரித்த மணிரத்னம் |
சமீபத்தில் மலையாள திரை உலகை சேர்ந்த பல நடிகைகள் நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை வெளியானதை தொடர்ந்து பிரபல நடிகர்களிடம் பல வருடங்களுக்கு முன்பு தாங்கள் எதிர்கொண்ட பாலியல் தொந்தரவுகள் குறித்து வெளிப்படையாக கூறி வருவதுடன் காவல் துறையிலும் புகார் அளித்து வருகின்றனர்.
அப்படி கூறியவர்களில் ஒரு நடிகை மட்டும் நடிகர்கள் சித்திக், ஜெயசூர்யா உள்ளிட்ட பல நடிகர்கள் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தி இருந்தார். இதனால் அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகைகளின் இந்த குற்றச்சாட்டுகளுக்கும் புகார்களுக்கும் பலர் ஆதரவாக குரல் கொடுத்தாலும் ஒரு சிலர் இது பழிவாங்கும் நடவடிக்கை என்றும், வாய்ப்புகள் வேண்டாம் என்றால் நாம் தான் ஒதுங்கி செல்ல வேண்டும் அதற்கு இணங்கி செல்லக்கூடாது என்பது போன்று எதிர்மறையாகவும் விமர்சனங்களை கூறி வருகின்றனர்.
குறிப்பாக திரையுலகத்தில் இருந்தே இதுபோன்று எதிர்ப்பு குரல் ஒலிக்கிறது என்றால் ஆச்சரியம் தான். இந்த வகையில் சமீபத்தில் வெளியான லப்பர் பந்து படம் மூலம் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ள மலையாள நடிகை சுவாசிகா மற்றும் நடிகை பீனா ஆண்டனி, நடிகர் மனோஜ் ஆகிய மூவரும் ஒரு யூடியூப் சேனல் ஒன்றில் அளித்த பேட்டியின் போது சம்பந்தப்பட்ட சில நடிகைகளின் புகார் குறித்தும் அவர்களது செயல்கள் குறித்தும் விமர்சிக்கும் விதமாக பேசி உள்ளனர். இதனை தொடர்ந்து இவர்கள் பெண்களின் மாண்பை இழிவு படுத்துகின்றனர் என்று கூறி ஏற்கனவே நடிகர்கள் மீது புகார் அளித்த அதே நடிகை இவர்கள் மூவரின் மீதும் போலீசில் புகார் செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து பெண்களை அவதூறாக பேசுதல் என்கிற வழக்கில் இவர்கள் மூவர் மீதும் பதிவு செய்யப்பட்டுள்ளது.