Advertisement

சிறப்புச்செய்திகள்

'சூர்யா 45' படத்தை இயக்கும் ஆர்ஜே பாலாஜி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | புதிய தோற்றத்தில் கமல் : அடுத்த படத்திற்கு தயார் | நான்கு நாட்களில் ரூ.240 கோடி வசூல் செய்த வேட்டையன்! | அமரன் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராக சிம்பு! | முன்னாள் மனைவியின் புகார் எதிரொலி- நடிகர் பாலா திடீர் கைது!! | அந்தரங்க வீடியோ லீக்... அவமானத்தில் முடிந்த அதீத நட்பு : போலீஸில் ஓவியா புகார் | கங்குவா படத்திற்காக ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் தயாரிப்பாளர் | எந்த சூழலிலும் யாருக்கும் பயப்பட மாட்டேன் - அடா சர்மா | குபேரா பட ரிலீஸ் குறித்து புதிய தகவல் இதோ! | தனுஷின் 'இட்லி கடை'யில் இணைந்த நித்யா மேனன், அருண் விஜய் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நடிகையின் புகார் எதிரொலி : லப்பர் பந்து நாயகி மீது கேரள போலீசார் வழக்கு

13 அக், 2024 - 04:22 IST
எழுத்தின் அளவு:
Actresss-complaint-echoes:-Kerala-police-files-case-against-Rubber-Bandhu-heroine

சமீபத்தில் மலையாள திரை உலகை சேர்ந்த பல நடிகைகள் நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை வெளியானதை தொடர்ந்து பிரபல நடிகர்களிடம் பல வருடங்களுக்கு முன்பு தாங்கள் எதிர்கொண்ட பாலியல் தொந்தரவுகள் குறித்து வெளிப்படையாக கூறி வருவதுடன் காவல் துறையிலும் புகார் அளித்து வருகின்றனர்.

அப்படி கூறியவர்களில் ஒரு நடிகை மட்டும் நடிகர்கள் சித்திக், ஜெயசூர்யா உள்ளிட்ட பல நடிகர்கள் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தி இருந்தார். இதனால் அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகைகளின் இந்த குற்றச்சாட்டுகளுக்கும் புகார்களுக்கும் பலர் ஆதரவாக குரல் கொடுத்தாலும் ஒரு சிலர் இது பழிவாங்கும் நடவடிக்கை என்றும், வாய்ப்புகள் வேண்டாம் என்றால் நாம் தான் ஒதுங்கி செல்ல வேண்டும் அதற்கு இணங்கி செல்லக்கூடாது என்பது போன்று எதிர்மறையாகவும் விமர்சனங்களை கூறி வருகின்றனர்.

குறிப்பாக திரையுலகத்தில் இருந்தே இதுபோன்று எதிர்ப்பு குரல் ஒலிக்கிறது என்றால் ஆச்சரியம் தான். இந்த வகையில் சமீபத்தில் வெளியான லப்பர் பந்து படம் மூலம் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ள மலையாள நடிகை சுவாசிகா மற்றும் நடிகை பீனா ஆண்டனி, நடிகர் மனோஜ் ஆகிய மூவரும் ஒரு யூடியூப் சேனல் ஒன்றில் அளித்த பேட்டியின் போது சம்பந்தப்பட்ட சில நடிகைகளின் புகார் குறித்தும் அவர்களது செயல்கள் குறித்தும் விமர்சிக்கும் விதமாக பேசி உள்ளனர். இதனை தொடர்ந்து இவர்கள் பெண்களின் மாண்பை இழிவு படுத்துகின்றனர் என்று கூறி ஏற்கனவே நடிகர்கள் மீது புகார் அளித்த அதே நடிகை இவர்கள் மூவரின் மீதும் போலீசில் புகார் செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து பெண்களை அவதூறாக பேசுதல் என்கிற வழக்கில் இவர்கள் மூவர் மீதும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
விசாரணைக்கு ஒத்துழைக்க அடம்பிடிக்கும் நடிகர் சித்திக் : விரைவில் கைதாக வாய்ப்புவிசாரணைக்கு ஒத்துழைக்க ... மகன்களின் கையால் ஊழியர்களுக்கு விஜயதசமி பரிசளித்த நயன்தாரா - விக்னேஷ்  சிவன் மகன்களின் கையால் ஊழியர்களுக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in