இந்த 3 விஷயங்களும் முக்கியமானவை : தீபிகா படுகோனே | உருவக்கேலி விவகாரம் : கயாடு லோஹர் கொடுத்த விளக்கம் | அடி வாங்க தயாரா : குஷ்பு கோபம் | தனுஷின் தேரே இஷ்க் மெயின் டிரைலர் வெளியீடு : வரவேற்பு எப்படி | காந்தா படத்தின் முதல் நாள் வசூல் விவரம் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி படத்திலிருந்து சுந்தர் சி விலகல் ஏன் : கமல் சொன்ன பதில் | ஜப்பானில் வெளியாகும் மலைக்கோட்டை வாலிபன் : ரிலீஸ் தேதி அறிவிப்பு | தேசிய விருதுக்கு படம் அனுப்புவதில் ஏற்பட்ட சிக்கல் : நீதிமன்றத்தை நாடிய பஹத் பாசில் படக்குழு | மம்முட்டிக்கு பிரித்விராஜ் சிபாரிசு, விநாயகனுக்கு மம்முட்டி சிபாரிசு : களம்காவல் சுவாரசியம் | சித்தார்த், ராஷி கண்ணா இணையயும் 'ரெளடி அண்ட் கோ' |

பிரபல எழுத்தாளர் பெருமாள் முருகன். இவர் எழுதிய 'கோடித்துணி' என்ற சிறுகதை 'அங்கம்மாள்' என்ற பெயரில் திரைப்படமாகி உள்ளது. விபின் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ள இந்த படத்தை என்ஜாய் பிலிம்ஸ் சார்பில் நடிகரும், பாடகருமான பிரோஸ் ரஹீம் மற்றும் அஞ்சாய் சாமுவேல் ஆகியோர் தயாரித்துள்ளனர்.
படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான அஞ்சாய் சாமுவேல் ஒளிப்பதிவு செய்துள்ளார். முகம்மது மக்பூல் மன்சூர் இசை அமைத்துள்ளார். கீதா கைலாசம், சரண், பரணி, தென்றல் ரகுநந்தன், முல்லையரசி, பேபி யாஸ்மின் மற்றும் பலர் நடித்துள்ளனர். படப்பிடிப்புகள் தற்போது நிறைவடைந்துள்ளது.