ரஜினியின் 'ஜெயிலர்-2' படத்தில் இணைந்த ஹிந்தி நடிகை அபேக்ஷா போர்வல்! | 15 கிலோ எடை குறைத்த கிரேஸ் ஆண்டனி! | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் அமரன்! | சூர்யாவின் 'கருப்பு' படத்தின் கிளைமாக்ஸை மாற்றும் ஆர்.ஜே.பாலாஜி! | விக்னேஷ் சிவனை தொடர்ந்து ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எலக்ட்ரிக் கார் வாங்கிய அட்லி! | 'பைசன் முதல் தி ஜூராசிக் வேர்ல்ட்' வரை..... இந்த வார ஓடிடி ரிலீஸ்..! | 'தி பேமிலி மேன் 3' ரிலீஸ்: பதட்டமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு: மனோஜ் பாஜ்பாய் | என் பெயரில் வரும் அழைப்புகள், மெசேஜ்கள் போலியானவை: தனுஷ் மானேஜர் அறிக்கை | பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு |

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்தபோதே அவருடன் நடித்தவர் அண்ணன் சக்கரபாணி. தம்பியின் உயர்வு ஒன்றே குறிக்கோள் என்று வாழ்ந்தவர். எம்.ஜி.ஆரும் தன் தாய்க்கு பிறகு அண்ணனைத்தான் தெய்வமாக வணங்கினார். பின்னாளில் எம்.ஜி.ஆர் பெரிய நட்சத்திரமாக மாறியபோதும் எல்லா வரவு செலவுகளையும் பார்த்துக் கொண்டவர் சக்கரபாணி. இதனால் சினிமாவில் சக்கரபாணியை 'பெரியவர்' என்றும் எம்ஜிஆரை 'சின்னவர்' என்றும் அழைப்பார்கள்.
இருவரும் பல படங்களில் இணைந்து நடித்துள்ளார்கள். ஆரம்ப கால கட்டத்தில் இருவரும் சில படங்களில் ஒரு சில காட்சிகளில் நடித்திருந்தாலும் முழுமையான கேரக்டராக இணைந்து நடித்தது 'இரு சகோதரர்கள்' படத்தில்தான். இந்த படத்தில் எம்.ஜி.ஆர், டி.எஸ்.பாலையாவின் நண்பராக நடித்தார். சக்கரபாணி போலீஸ் அதிகாரியாக நடித்தார்.
1936ம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தை எல்லீஸ் ஆர்.டங்கன் இயக்கினார், கே.பி.கேசவன், கே.கே.பெருமாள், டி.எஸ்.பாலையா, எஸ்.என்.விஜயலட்சுமி, ராஜம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். கூட்டுக் குடும்பத்தில் அண்ணன், தம்பிகளுக்கு இடையில் வரும் மோதலும், கூடலும்தான் கதை.




