கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் |
தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் சூர்யா, ஹிந்தியிலும் நடிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக மும்பை சென்று செட்டிலானார் என்று சொல்லப்பட்டது. அங்கு இருந்தால்தான் வாய்ப்புகளைப் பெற முடியும் என மனைவி ஜோதிகாவின் ஆலோசனையைக் கேட்டுத்தான் சென்னையை விட்டு மும்பைக்குப் போனார் என்பது கோலிவுட் தகவல்.
அவர் அங்கு செட்டிலான பின்பு பாலிவுட்டின் பிரபல இயக்குனரான ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்கத்தில் 'கர்ணா' படத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியானது. கடந்த இரண்டு வருடங்களாக தகவலாகவே இருக்கும் அப்படத்தின் அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும், சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் அப்படம் குறித்த அப்டேட் ஒன்றைக் கொடுத்துள்ளார் ஓம்பிரகாஷ்.
'கர்ணா' படத்தில் சூர்யா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும், தற்போது படத்தின் முன்தயாரிப்புப் பணிகளை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். அந்தப் பணிகளை அவர் முடித்த பின் அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.