23வது சென்னை திரைப்பட விழாவில் தமிழ் 12 படங்கள் | ஒரே ஒரு ஹிட்டுக்காக காத்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் | தமிழை விட்டு விலகி செல்கிறாரா சூர்யா? | இசை ஆல்பம் இயக்கிய ஷாம் | நடிகை பலாத்கார வழக்கில் நடிகர் திலீப் விடுதலை : மற்ற 6 பேர் குற்றவாளி என தீர்ப்பு | இயற்கை விவசாயம் செய்யும் மேக்னா | பிளாஷ்பேக்: நட்சத்திர ஓட்டல்களில் படமான 'வேலைக்காரன்' | பிளாஷ்பேக்: சரித்திர படத்தில் சோலோ ஹீரோயினாக நடித்த கண்ணாம்பா | 2026 சினிமா நிலைமை இப்படி இருக்க போகிறது : திருப்பூர் சுப்ரமணியம் சொல்லும் அதிர்ச்சி தகவல் | கோவை தமிழ் பிடிக்கும்னு கிர்த்தி ஷெட்டி சொன்னது ஏன்? |

இயக்குனர் பாரதிராஜாவின் ஆஸ்தான ஒளிப்பதிவாளராக இருந்தவர் பி.எஸ்.நிவாஸ். மலையாள சினிமாவின் முக்கியமான ஒளிப்பதிவாளராக இருந்தவரை தமிழுக்கு அழைத்து வந்தார் பாரதிராஜா. 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள் என அந்தக் காலத்தில் ஒளிப்பதிவுக்கு பேசப்பட்ட படங்களுக்கு நிவாஸ் ஒளிப்பதிவு செய்தார்.
1980ம் ஆண்டு பாரதிராஜா 'கல்லுக்குள் ஈரம்' படத்தை எடுத்தார். தனது சொந்த வாழ்க்கையின் அடிப்படையில் இந்த படத்தை உருவாக்கினார் பாரதிராஜா. படப்பிடிப்புக்காக கிராமத்துக்கு செல்லும் பாரதிராஜாவை கிராமத்து பெண் ஒருத்தி காதலிப்பது மாதிரியான கதை. இந்த படத்தை முதலில் பாரதிராஜாவே இயக்கினார். சில நாட்களுக்கு பிறகு தன்னை தானே இயக்குவதில் சிரமம் இருந்ததால் படத்தின் ஒளிப்பதிவாளரான நிவாசை அழைத்து 'நீயே படத்தை இயக்கு' என்று பொறுப்பை அவரிடம் ஒப்படைத்தார். அவரும் படத்தை இயக்கினார். ஆனால் இந்த படம் போதிய வரவேற்பை பெறவில்லை.
சொல்லப்போனால் பாரதிராஜாவின் முதல் தோல்வி படம் இது. அதன் பிறகு பாரதிஜாவும், நிவாசும் பிரிந்தனர். கண்ணன் பாரதிராஜாவின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் ஆனார். நிவாஸ் தனது ஒளிப்பதிவு பணியை வெவ்வேறு இயக்குனர்களுடன் தொடர்ந்தார். அதோடு எனக்காக காத்திரு, நிழல் தேடும் நெஞ்சம், செவ்வந்தி ஆகிய படங்களை இயக்கவும் செய்தார்.