உருவக்கேலியை ஏற்க முடியாது ; ஆதரித்தவர்களுக்கு நன்றி : கவுரி கஷன் அறிக்கை | பிளாஷ்பேக் : மலையாள சினிமாவை கதற வைத்த மோனிஷா உன்னி | ரிலீசுக்காக 5 வருடங்கள் காத்திருந்த படம் | லட்சுமி மேனன் மீதான ஆள்கடத்தல் வழக்கு தள்ளுபடி | ஆஸ்கர் மியூசியத்தில் திரையிடப்படும் 'பிரம்மயுகம்' | மிடில் கிளாஸ் படம் எதை பேசுகிறது | கும்கி 2 பட ஹீரோ மதி யார் தெரியுமா? : லிங்குசாமி சொன்ன குட்டி லவ் ஸ்டோரி | காதலருடன் கட்டியணைத்து போஸ் கொடுத்த சமந்தா | 50 கோடி கிளப்பில் இணைந்த ‛டயஸ் இரே' : ஹாட்ரிக் அடித்த பிரணவ் மோகன்லால் | கிறிஸ்துமஸ் ரிலீஸ் ஆக தள்ளிப்போன விருஷபா |

இயக்குனர் பாரதிராஜாவின் ஆஸ்தான ஒளிப்பதிவாளராக இருந்தவர் பி.எஸ்.நிவாஸ். மலையாள சினிமாவின் முக்கியமான ஒளிப்பதிவாளராக இருந்தவரை தமிழுக்கு அழைத்து வந்தார் பாரதிராஜா. 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள் என அந்தக் காலத்தில் ஒளிப்பதிவுக்கு பேசப்பட்ட படங்களுக்கு நிவாஸ் ஒளிப்பதிவு செய்தார்.
1980ம் ஆண்டு பாரதிராஜா 'கல்லுக்குள் ஈரம்' படத்தை எடுத்தார். தனது சொந்த வாழ்க்கையின் அடிப்படையில் இந்த படத்தை உருவாக்கினார் பாரதிராஜா. படப்பிடிப்புக்காக கிராமத்துக்கு செல்லும் பாரதிராஜாவை கிராமத்து பெண் ஒருத்தி காதலிப்பது மாதிரியான கதை. இந்த படத்தை முதலில் பாரதிராஜாவே இயக்கினார். சில நாட்களுக்கு பிறகு தன்னை தானே இயக்குவதில் சிரமம் இருந்ததால் படத்தின் ஒளிப்பதிவாளரான நிவாசை அழைத்து 'நீயே படத்தை இயக்கு' என்று பொறுப்பை அவரிடம் ஒப்படைத்தார். அவரும் படத்தை இயக்கினார். ஆனால் இந்த படம் போதிய வரவேற்பை பெறவில்லை.
சொல்லப்போனால் பாரதிராஜாவின் முதல் தோல்வி படம் இது. அதன் பிறகு பாரதிஜாவும், நிவாசும் பிரிந்தனர். கண்ணன் பாரதிராஜாவின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் ஆனார். நிவாஸ் தனது ஒளிப்பதிவு பணியை வெவ்வேறு இயக்குனர்களுடன் தொடர்ந்தார். அதோடு எனக்காக காத்திரு, நிழல் தேடும் நெஞ்சம், செவ்வந்தி ஆகிய படங்களை இயக்கவும் செய்தார்.