பிளாஷ்பேக்: இயக்குனர் பாரதிராஜாவை இயக்கிய நிவாஸ் | அக்ஷய் குமாரின் இரண்டு தோல்விப் படங்கள், அடுத்த வாரம் ஓடிடியில்… | பிளாஷ்பேக்: அண்ணன், தம்பி இணைந்து நடித்த 'இரு சகோதரர்கள்' | சூர்யா நடிக்க உள்ள 'கர்ணா': உறுதி செய்த தயாரிப்பாளர் | நடன இயக்குனர் ஜானிக்கு தேசிய விருது ரத்து | யார் அந்த காதலர்? அன்வரா? அன்ஷிதாவிடம் குவியும் கேள்விகள் | விஜய்யுடன் இணைந்து நடிக்கும் மோனிஷா | மஞ்சும்மேல் பாய்ஸ் படம் பார்த்து கண்கலங்கிய ரஷ்ய ரசிகர்கள் | அரசகட்டளை, அந்நியன், அண்ணாத்த - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக் : “16 வயதினிலே” தந்த பன்முகத் திரைக்கலைஞர் பின்னணிப் பாடகர் மலேசியா வாசுதேவன் |
இயக்குனர் பாரதிராஜாவின் ஆஸ்தான ஒளிப்பதிவாளராக இருந்தவர் பி.எஸ்.நிவாஸ். மலையாள சினிமாவின் முக்கியமான ஒளிப்பதிவாளராக இருந்தவரை தமிழுக்கு அழைத்து வந்தார் பாரதிராஜா. 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள் என அந்தக் காலத்தில் ஒளிப்பதிவுக்கு பேசப்பட்ட படங்களுக்கு நிவாஸ் ஒளிப்பதிவு செய்தார்.
1980ம் ஆண்டு பாரதிராஜா 'கல்லுக்குள் ஈரம்' படத்தை எடுத்தார். தனது சொந்த வாழ்க்கையின் அடிப்படையில் இந்த படத்தை உருவாக்கினார் பாரதிராஜா. படப்பிடிப்புக்காக கிராமத்துக்கு செல்லும் பாரதிராஜாவை கிராமத்து பெண் ஒருத்தி காதலிப்பது மாதிரியான கதை. இந்த படத்தை முதலில் பாரதிராஜாவே இயக்கினார். சில நாட்களுக்கு பிறகு தன்னை தானே இயக்குவதில் சிரமம் இருந்ததால் படத்தின் ஒளிப்பதிவாளரான நிவாசை அழைத்து 'நீயே படத்தை இயக்கு' என்று பொறுப்பை அவரிடம் ஒப்படைத்தார். அவரும் படத்தை இயக்கினார். ஆனால் இந்த படம் போதிய வரவேற்பை பெறவில்லை.
சொல்லப்போனால் பாரதிராஜாவின் முதல் தோல்வி படம் இது. அதன் பிறகு பாரதிஜாவும், நிவாசும் பிரிந்தனர். கண்ணன் பாரதிராஜாவின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் ஆனார். நிவாஸ் தனது ஒளிப்பதிவு பணியை வெவ்வேறு இயக்குனர்களுடன் தொடர்ந்தார். அதோடு எனக்காக காத்திரு, நிழல் தேடும் நெஞ்சம், செவ்வந்தி ஆகிய படங்களை இயக்கவும் செய்தார்.