தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

விஜய் நடிப்பில் சமீபத்தில் 'தி கோட்' படம் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த படத்தை அடுத்து வினோத்தின் இயக்கத்தில் தனது 69வது படத்தில் நடிக்கிறார். இந்த படத்துடன் அவர் சினிமாவிற்கு முழுக்கு போட்டுவிட்டு அரசியலுக்கு பயணிக்க உள்ளார். இதனால் இப்படம் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பெங்களூரை சேர்ந்த கேவிஎன் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இந்த வாரத்தில் படப்பிடிப்பை துவங்குகின்றனர்.
இந்நிலையில் படத்தில் நடிக்கும் நடிகர்கள் பற்றிய அறிவிப்பை இன்று(அக்.,1) முதல் தொடர்ந்து அறிவித்து வருகின்றனர். அந்த வகையில், ஹிந்தி நடிகர் பாபி தியோல், நடிகைகள் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி, நடிகரும் இயக்குனருமான கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் நடிப்பதாக வரிசையாக அப்டேட்களை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. அந்த வரிசையில் தற்போது நடிகர் நரைனும் இணைந்துள்ளதாக தற்போது அறிவித்துள்ளனர். நட்சத்திர பட்டாளங்கள் இந்த படத்தில் இணைந்திருப்பதால் படத்தின் மீது எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.