விஜயுடன் இணைய தயார்: ‛புலி' பட தயாரிப்பாளர் அறிவிப்பு | உண்மை சம்பவம் பின்னணியில் உருவான ‛ரோஜா மல்லி கனகாம்பரம்' | ‛போலீஸ் ஸ்டேஷன் மெயின் பூத்': ரம்யா கிருஷ்ணனின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராஷ்மிகாவின் ‛மைசா' படப்பிடிப்பு கேரளா அதிரப்பள்ளி காட்டுப் பகுதியில் தொடங்கியது! | அஜித் 64வது படம் : பிளானை மாற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்! | தன்னுடைய பெயரில் ரசிகர் நடத்தும் ஹோட்டலுக்கு அனுமதி அளித்த சிரஞ்சீவி | பஸ் விபத்து எதிரொலி ; மீனாட்சி சவுத்ரி போஸ்டர் வெளியீட்டை தள்ளிவைத்த நாக சைதன்யா படக்குழு | சீனியர் நடிகர் மதுவை நேரில் சென்று சந்தித்த மம்முட்டி | காந்தாராவை பணத்திற்காக எடுக்கவில்லை: ரிஷப் ஷெட்டி | 2030லாவது மகாபாரதத்தை ஆரம்பிப்பீர்களா ? ராஜமவுலிக்கு மகேஷ்பாபு கேள்வி |

விஜய் நடிப்பில் சமீபத்தில் 'தி கோட்' படம் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த படத்தை அடுத்து வினோத்தின் இயக்கத்தில் தனது 69வது படத்தில் நடிக்கிறார். இந்த படத்துடன் அவர் சினிமாவிற்கு முழுக்கு போட்டுவிட்டு அரசியலுக்கு பயணிக்க உள்ளார். இதனால் இப்படம் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பெங்களூரை சேர்ந்த கேவிஎன் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இந்த வாரத்தில் படப்பிடிப்பை துவங்குகின்றனர்.
இந்நிலையில் படத்தில் நடிக்கும் நடிகர்கள் பற்றிய அறிவிப்பை இன்று(அக்.,1) முதல் தொடர்ந்து அறிவித்து வருகின்றனர். அந்த வகையில், ஹிந்தி நடிகர் பாபி தியோல், நடிகைகள் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி, நடிகரும் இயக்குனருமான கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் நடிப்பதாக வரிசையாக அப்டேட்களை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. அந்த வரிசையில் தற்போது நடிகர் நரைனும் இணைந்துள்ளதாக தற்போது அறிவித்துள்ளனர். நட்சத்திர பட்டாளங்கள் இந்த படத்தில் இணைந்திருப்பதால் படத்தின் மீது எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.