300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிஸியாக நடிகையாக இருந்து வருகிறார் பிரியங்கா மோகன். தற்போது எம் ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள 'பிரதர்' படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் புரமோஷனுக்காக பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
இந்த நிலையில் தெலுங்கானாவின் தோரூர் பகுதியில் உள்ள கடை திறப்பு விழாவில் இன்று (அக்.,3) அவர் பங்கேற்றார். அப்போது அவர் நின்றிருந்த மேடை திடீரென சரிந்து விழுந்தது. இதில் பிரியங்கா மோகன் உட்பட மேடையில் இருந்த அனைவரும் கீழே விழுந்தனர். எதிர்பாராத இந்த விபத்தில் அவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் பிரியங்கா மோகன் வெளியிட்ட பதிவு: தோரூரில் நான் கலந்து கொண்ட ஒரு நிகழ்வில் நடந்த விபத்தில் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளேன் என்பதை எனது நலம் விரும்பிகளுக்கு தெரிவிக்க விரும்புகிறேன். இந்த சம்பவத்தில் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். என்மீது அன்பும் அக்கறையும் கொண்ட அனைவருக்கும் நன்றி. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.