குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு | இருமனம் ஒருமனமான தருணம்... : 2025ல் கெட்டிமேளம் கொட்டிய திரைப்பிரபலங்கள்...! | பிளாஷ்பேக்: புதுமுகங்களின் அணிவகுப்பில் புதுமை படைத்த “பொண்ணுக்கு தங்க மனசு” | பான் இந்தியா அளவில் முன்னேறிச் சென்றது தனுஷ் மட்டுமே… | ராதிகா சரத்குமார் கொடுத்த கிறிஸ்துமஸ் 'லன்ச்' விருந்து |

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிஸியாக நடிகையாக இருந்து வருகிறார் பிரியங்கா மோகன். தற்போது எம் ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள 'பிரதர்' படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் புரமோஷனுக்காக பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
இந்த நிலையில் தெலுங்கானாவின் தோரூர் பகுதியில் உள்ள கடை திறப்பு விழாவில் இன்று (அக்.,3) அவர் பங்கேற்றார். அப்போது அவர் நின்றிருந்த மேடை திடீரென சரிந்து விழுந்தது. இதில் பிரியங்கா மோகன் உட்பட மேடையில் இருந்த அனைவரும் கீழே விழுந்தனர். எதிர்பாராத இந்த விபத்தில் அவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் பிரியங்கா மோகன் வெளியிட்ட பதிவு: தோரூரில் நான் கலந்து கொண்ட ஒரு நிகழ்வில் நடந்த விபத்தில் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளேன் என்பதை எனது நலம் விரும்பிகளுக்கு தெரிவிக்க விரும்புகிறேன். இந்த சம்பவத்தில் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். என்மீது அன்பும் அக்கறையும் கொண்ட அனைவருக்கும் நன்றி. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.