முதலில் மறக்கப்பட்டதா ‛ஜனனி' பாடல் : பாடி முடித்து வைத்த இளையராஜா | கேரளாவில் 'காந்தாரா 2' வெளியீடு சிக்கல் சுமூகமாக தீர்ந்தது | தயாரிப்பு நிறுவனம் துவங்கிய 'மின்னல் முரளி' இயக்குனர் | லோகா படப்பிடிப்பின் போது வீட்டுக்கு செல்வதையே தவிர்த்தேன் ; சாண்டி | ஹிந்தியில் ஹீரோ கிடைக்காததால் மிராஜ் படத்தை மலையாளத்தில் இயக்கினேன் ; ஜீத்து ஜோசப் | தாராளமாக வெளியேறலாம் ; பிக்பாஸ் வைல்ட் கார்டு போட்டியாளர்களிடம் கோபம் காட்டிய மோகன்லால் | ‛வட சென்னை 2' வில் தனுஷ் : வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது | குல தெய்வம் கோயிலுக்கு போங்க : ரசிகர்களுக்கு தனுஷ் அட்வைஸ் | முதல்வரின் வேண்டுகோளை கண்டிப்பா நிறைவேற்றுவேன்: இளையராஜா | மதராஸி, லோகா படங்களின் பாக்ஸ் ஆபீஸ் தகவல் வெளியானது! |
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிஸியாக நடிகையாக இருந்து வருகிறார் பிரியங்கா மோகன். தற்போது எம் ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள 'பிரதர்' படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் புரமோஷனுக்காக பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
இந்த நிலையில் தெலுங்கானாவின் தோரூர் பகுதியில் உள்ள கடை திறப்பு விழாவில் இன்று (அக்.,3) அவர் பங்கேற்றார். அப்போது அவர் நின்றிருந்த மேடை திடீரென சரிந்து விழுந்தது. இதில் பிரியங்கா மோகன் உட்பட மேடையில் இருந்த அனைவரும் கீழே விழுந்தனர். எதிர்பாராத இந்த விபத்தில் அவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் பிரியங்கா மோகன் வெளியிட்ட பதிவு: தோரூரில் நான் கலந்து கொண்ட ஒரு நிகழ்வில் நடந்த விபத்தில் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளேன் என்பதை எனது நலம் விரும்பிகளுக்கு தெரிவிக்க விரும்புகிறேன். இந்த சம்பவத்தில் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். என்மீது அன்பும் அக்கறையும் கொண்ட அனைவருக்கும் நன்றி. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.