ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள வேட்டையன் படம் வருகிற 10ம் தேதி திரைக்கு வருகிறது. நேற்று இப்படத்தின் டிரைலர் வெளியான நிலையில், இப்படம் என்கவுன்டர் பற்றி பேசும் படம் என்பது தெரிய வந்திருக்கிறது. இந்த நிலையில் வேட்டையன் படத்தை வெளியிட தடை கோரி, பழனிவேல் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருக்கிறார்.
அவர் தாக்கல் செய்த அந்த மனுவில், வேட்டையன் படத்தில் இடம் பெற்றிருக்கும் என்கவுன்டர் சம்பந்தப்பட்ட வசனங்களை நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது படத்திற்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்த நீதிமன்றம், லைகா நிறுவனம் மற்றும் சென்சார் போர்டு விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதி ஒத்தி வைத்தார்.