பிளாஷ்பேக்: நிஜ ராணுவ முகாமில் எடுக்கப்பட்ட படம் | 8 வார இடைவெளியில் ஓடிடி, தயாரிப்பாளர்கள் சம்மதிப்பார்களா? | அல்லு சினிமாஸ் 'புகழ் சுவர்' - அட்லிக்கு இடம் தந்த அல்லு அர்ஜுன் | மார்ச் 15 முதல் புதிய படங்களுக்கு சப் டைட்டில், ஆடியோ விளக்கம் கட்டாயம் | லாரி ஏறிச் சென்று படம் பார்த்தேன்: தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி | காதல் பிரிவில் அர்ஜுன் தாஸ்? | வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! |

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில், ராதிகா சரத்குமார் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் 'தாய் கிழவி'. இப்படத்தை முதலில் பிப்ரவரி 20ம் தேதி வெளியிடுவதாக அறிவித்து, திடீரென பிப்ரவரி 27ம் தேதிக்கு மாற்றினார்கள்.
பட வினியோகம் தொடர்பாக ஏற்பட்ட குழப்பமே அதற்குக் காரணம் என திரையுலகில் சொன்னார்கள். படத்தை வெளியிடுவதாகப் பேசி ஒரு வினியோகஸ்தர் அட்வான்ஸ் தொகையைக் கொடுத்துள்ளார். ஆனால், மீதித் தொகையைத் தருவதில் தாமதம் ஏற்படவே படத்தைத் தற்போது ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு விற்றார்களாம்.
ஆனால், முதலில் படத்தை வெளியிடுவதாகச் சொல்லி அட்வான்ஸ் தந்த வினியோகஸ்தர் தற்போது பஞ்சாயத்தைக் கூட்டியுள்ளாராம். படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான சுதன் மருத்துவ சிகிச்சையில் இருந்ததால் பின்னர் பேசிக் கொள்ளலாம் என்றார்கள். ஆனால், தற்போது திடீரென வேறு ஒருவருக்குப் படத்தைக் கொடுத்துவிட்டார்கள் என வினியோகஸ்தர்கள் சங்கத்தில் புகார் அளித்துள்ளாராம்.
தற்போது படத்தின் பஞ்சாயத்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். அதில் சுமூக முடிவு எட்டப்படலாம் எனத் தெரிகிறது.




