எங்கிருந்து வந்தேனோ அங்கேயே தான் இருக்கிறேன் : இளையராஜா பேட்டி | விவாகரத்து செய்திகளுக்கு மவுனி ராய் கொடுத்த விளக்கம் | ஜூன் 19ல் திரைக்கு வரும் ‛மா இண்டி பங்காரம்' | மே 28ல் அர்ஜுனின் பிளாஸ்ட் ரிலீஸ் | கேமராவுக்கு பின்னால் எனக்கு நடிக்க தெரியவில்லை : மீனாட்சி சவுத்ரி | 'ஜனநாயகன்' போல் பைரசியில் 'கருப்பு'?: அச்சத்தில் தயாரிப்பாளர்கள் | பரிதாபம் : ஜெயிலர் 2 படப்பிடிப்பில் ஒருவர் பலி | இளையராஜா குடும்பத்துடன் 50 ஆண்டுகளாக நட்பு தொடர்கிறது: மறைந்த பஞ்சு அருணாசலம் மகன் சுப்பு பஞ்சு பேட்டி | கருப்பு : அனைத்து பகல் காட்சிகளும் ரத்து | திருவண்ணாமலையில் கிரிவலம் வந்த நடிகை அஞ்சலி |

கடந்த 2022ல் கன்னடத்தில் இயக்குனர் ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கி வெளியான 'காந்தாரா' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்த படத்திற்கு தென்னிந்திய மொழிகளிலும் மற்றும் ஹிந்தியிலும் கூட மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து அடுத்ததாக ரிஷப் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை 'காந்தாரா சாப்டர் 1' என்கிற பெயரில் இயக்கி நடித்துள்ளார். வரும் அக்டோபர் 2ம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் கேரள வெளியீட்டு உரிமையை பிரபல தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான லிஸ்டின் ஸ்டீபன் மற்றும் நடிகர் பிரித்விராஜ் இருவரும் இணைந்து வாங்கியுள்ளனர். ஆனால் திரையரங்கு உரிமையாளர்களுக்கு படத்தின் முதல் வாரத்தில் மட்டுமே 55 சதவீதம் பங்கு தருவேன் என பிடிவாதம் காட்டினார் லிஸ்டின் ஸ்டீபன்.
தியேட்டர் அதிபர்களோ இரண்டு வாரத்திற்கும் 55 சதவீத பங்கு வேண்டும் என கேட்டனர். இதனால் காந்தாரா 2 கேரளாவில் வெளியாவதில் ஒரு இழுபறி ஏற்பட்டது. இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் சங்கம் இணைந்து நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்படிக்கை ஏற்பட்டு இரண்டு வாரங்களுக்கும் தியேட்டர் அதிபர்களுக்கு 55 சதவீதம் பங்கு கொடுக்கப்படும் என லிஸ்டின் ஸ்டீபன் உறுதி அளித்துள்ளார். இதனை தொடர்ந்து பிரச்னை சுமூகமாக முடிவுக்கு வந்துள்ளது.