ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களில் நடித்தவர் நெப்போலியன். தனது மூத்த மகன் தனுசுக்கு ஏற்பட்டுள்ள தசை சிதைவு நோய் காரணமாக சிகிச்சை செய்ய அமெரிக்காவுக்கு சென்றவர் பின்னர் அங்கேயே குடும்பத்துடன் செட்டில் ஆகிவிட்டார். அதோடு தனது மகன் தனுசுக்கு திருமணம் நடத்தி வைக்க முடிவு செய்து சில மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடத்தினார். ஆனால் தசை சிதைவு ஏற்பட்டுள்ள மகனுக்கு எதற்காக இவர் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று பலரும் சோசியல் மீடியாவில் கடுமையான விமர்சனங்களை வெளியிட்டு வருகிறார்கள்.
இந்தநிலையில் நடிகர் நெப்போலியன் இன்ஸ்டாவில் ஒரு உருக்கமான வேண்டுகோள் வைத்திருக்கிறார் . அதில், அன்பு நண்பர்களே, உலகம் எங்கும் வாழும் தமிழ் சொந்தங்களே. இந்தியாவில் பிறந்தாலும் சூழ்நிலை காரணமாக அமெரிக்காவில் வசிக்கிறோம். ஒரு வருடமாக ஜப்பான் செல்ல திட்டமிட்டு ஆறு மாதங்களாக அதற்கு செயல் வடிவம் கொடுத்து, ஒரு மாத பயணம் செய்து எனது மகனின் ஆசையை நிறைவேற்றி இருக்கிறோம்.
எங்களது வாழ்வை தவறாக விமர்சிப்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். நம்முடைய பெற்றோரின் கனவுக்காகவும், நமது கனவுக்காகவும், பிள்ளைகளின் கனவுக்காகவும் அவசியம் வாழ்ந்தாக வேண்டும். கடமையை நிறைவேற்ற வேண்டும். வாழ்க்கை என்பது ஒரு முறை தான். அதை வாழ்ந்து தான் பார்ப்போமே.
உண்மை தெரியாமல் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் மாற்றவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை யாரும் விமர்சனம் செய்யாதீர்கள். எங்களை போன்று உங்களுக்கும் குடும்பம் இருக்கிறது. ஒரு பக்க சொல் ஒரு யானை பலம். எல்லோரையும் வாழ்த்துங்கள். பிடிக்கவில்லை என்றால் இழிவாக மட்டும் பேசாதீர்கள். ஏனென்றால் அது ஒருநாள் உங்களுக்கே திரும்பி விடும். எண்ணம் போல் தான் வாழ்க்கை. அதனால் சிந்தித்து செயல்படுங்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.