இந்தவாரம் வரிசை கட்டும் படங்கள் : பிப்., 14ல் இவ்வளவு படங்கள் ரிலீஸா...! | ஜாலியா வாங்க.. ஜாலியா போங்க..: தனுஷின் ‛நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' டிரைலர் வெளியீடு | பிளாஷ்பேக்: லட்ச ரூபாய் ஊதியம் பெற்ற முதல் பெண் திரைக்கலைஞர், ஆண் வேடமேற்று நடித்திருந்த “பக்த நந்தனார்” | தம்பி வருகையால் நடிப்பில் கவனம் செலுத்தும் அண்ணன் | ஒரு திரைப்படம் வாழ்க்கையை மாற்றியது: சொல்கிறார் இஸ்மத்பானு | பிளாஷ்பேக் : 'விடாமுயற்சி'க்கு முன்னோடி 'கருடா சௌவுக்யமா' | பிளாஷ்பேக் : முதன் முறையாக ஒரே படத்திற்கு மூன்று கிளைமாக்ஸ் | சமந்தா விவாகரத்து விஷயத்தில் என்னை குற்றவாளியாக பார்க்காதீர்கள்? : நாகசைதன்யா ஆதங்கம் | மசாலா கம்பெனி ஓனர் டூ விருது நடிகர் ! ரவிச்சந்திரனின் வாழ்க்கை பயணம் | கணவர் நேத்ரன் குறித்து மனம் திறந்த தீபா |
தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களில் நடித்தவர் நெப்போலியன். தனது மூத்த மகன் தனுசுக்கு ஏற்பட்டுள்ள தசை சிதைவு நோய் காரணமாக சிகிச்சை செய்ய அமெரிக்காவுக்கு சென்றவர் பின்னர் அங்கேயே குடும்பத்துடன் செட்டில் ஆகிவிட்டார். அதோடு தனது மகன் தனுசுக்கு திருமணம் நடத்தி வைக்க முடிவு செய்து சில மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடத்தினார். ஆனால் தசை சிதைவு ஏற்பட்டுள்ள மகனுக்கு எதற்காக இவர் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று பலரும் சோசியல் மீடியாவில் கடுமையான விமர்சனங்களை வெளியிட்டு வருகிறார்கள்.
இந்தநிலையில் நடிகர் நெப்போலியன் இன்ஸ்டாவில் ஒரு உருக்கமான வேண்டுகோள் வைத்திருக்கிறார் . அதில், அன்பு நண்பர்களே, உலகம் எங்கும் வாழும் தமிழ் சொந்தங்களே. இந்தியாவில் பிறந்தாலும் சூழ்நிலை காரணமாக அமெரிக்காவில் வசிக்கிறோம். ஒரு வருடமாக ஜப்பான் செல்ல திட்டமிட்டு ஆறு மாதங்களாக அதற்கு செயல் வடிவம் கொடுத்து, ஒரு மாத பயணம் செய்து எனது மகனின் ஆசையை நிறைவேற்றி இருக்கிறோம்.
எங்களது வாழ்வை தவறாக விமர்சிப்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். நம்முடைய பெற்றோரின் கனவுக்காகவும், நமது கனவுக்காகவும், பிள்ளைகளின் கனவுக்காகவும் அவசியம் வாழ்ந்தாக வேண்டும். கடமையை நிறைவேற்ற வேண்டும். வாழ்க்கை என்பது ஒரு முறை தான். அதை வாழ்ந்து தான் பார்ப்போமே.
உண்மை தெரியாமல் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் மாற்றவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை யாரும் விமர்சனம் செய்யாதீர்கள். எங்களை போன்று உங்களுக்கும் குடும்பம் இருக்கிறது. ஒரு பக்க சொல் ஒரு யானை பலம். எல்லோரையும் வாழ்த்துங்கள். பிடிக்கவில்லை என்றால் இழிவாக மட்டும் பேசாதீர்கள். ஏனென்றால் அது ஒருநாள் உங்களுக்கே திரும்பி விடும். எண்ணம் போல் தான் வாழ்க்கை. அதனால் சிந்தித்து செயல்படுங்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.