Advertisement

சிறப்புச்செய்திகள்

விவாகரத்தில் உடன்பாடில்லை... பேச தயார் : ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி அறிக்கை | பழநி பஞ்சாமிர்தம் பற்றி அவதூறு கருத்து: இயக்குனர் மோகன் மன்னிப்பு கேட்க உத்தரவு | அக்டோபர் 2ல் வெளியாகிறது 'வேட்டையன்' டிரைலர் | ''என்னை பேயாக பார்க்கணுமா?'': ரசிகரிடம் மறுகேள்வி கேட்ட மாளவிகா மோகனன் | தெலுங்கில் ரீமேக் ஆகும் கருடன்! | பிளாஷ்பேக்: ஆண்டுகள் 60 ஆனாலும் என்றும் 20 ஆக காட்சி தரும் “காதலிக்க நேரமில்லை” படத்தில் இத்தனை சுவாரஸ்யங்களா? | பிளாஷ்பேக்: குங்குமப் பொட்டின் மங்கலத்தை எடுத்துரைத்த இஸ்லாமிய பெண் பாடலாசிரியர் ரோஷனாரா பேகம் | புதிய தோற்றத்திற்கு மாறிய சாய் தன்ஷிகா | பிளாஷ்பேக் : சீர்திருத்த திருமணத்தை பேசிய படம் | அவமானங்களை தாங்கித்தான் டைட்டில் வென்றேன்: 'பருத்திவீரன்' சுஜாதா |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிளாஷ்பேக்: குங்குமப் பொட்டின் மங்கலத்தை எடுத்துரைத்த இஸ்லாமிய பெண் பாடலாசிரியர் ரோஷனாரா பேகம்

30 செப், 2024 - 01:46 IST
எழுத்தின் அளவு:
Flashback:-Muslim-female-lyricist-Roshanara-Begum-sings-the-magic-of-kumkum


தமிழ் திரையுலகின் தொடக்க காலம் தொட்டே, நடிப்புத் துறையிலும், இசைத் துறையிலும் ஆண்களுக்கு நிகராக பெண்களின் பங்களிப்பு என்பது, வேறுபல துறைகளோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் ஒரு அசுரத்தனமான வளர்ச்சி என்றே கூற முடியும். இருப்பினும் திரைக்குப் பின்னால் இயங்கி வரும் தொழில்நுட்ப கலைஞர்களில் பெண்களின் பங்களிப்பு என்பது இன்னும் குறைவான எண்ணிக்கையில் இருக்கின்றது என்பதை யாரும் மறுத்துவிட இயலாது.
அவ்வாறு திரைக்குப் பின்னால் செயல்படும் துறைகளில் ஒன்றான பாடலாசிரியர்கள் பட்டியலில் பெண்களின் பங்களிப்பு என்பது அங்கொன்றும் இங்கொன்றுமாக விரல் விட்டு எண்ணக் கூடிய அளவிலேயே இன்னமும் இருந்து வருகின்றது. இப்போதுள்ள திரைப்பட பாடலாசிரியர்கள் பட்டியலில் கூட, பெண் பாடலாசிரியர் என்று தாமரை ஒருவரைத் தவிர வேறு யாரும் பெரிதாக திரை வெளிச்சத்தில் இருப்பதாக தெரியவில்லை. அப்படி ஒரு பெண் பாடலாசிரியராக 60களில் அறிமுகமானவர்தான் இஸ்லாமிய பெண் பாடலாசிரியர் ரோஷனாரா பேகம்.
கோவையை பிறப்பிடமாகக் கொண்ட இவர், அங்குள்ள புனித பிரான்ஸிஸ் கான்வென்ட் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை படித்திருக்கின்றார். பள்ளி நாட்களிலேயே கவிதை ஞானம் உள்ளவராகவும், இசையில் நாட்டம் கொண்டவராகவும் இருந்திருக்கின்றார். மகளின் ஆர்வத்தை அறிந்திருந்த அவரது தந்தை ஷேக் முஸ்தபா அவரை ஊக்குவிக்கும் விதத்தில் அவருக்கு உறுதுணையாய் இருந்திருக்கின்றார். மேலும் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் கோவை வரும்போதெல்லாம் இவரது வீட்டிற்கு வந்து செல்லும் அளவிற்கு இருவருக்குமிடையே நட்பும் இருந்தது.

இதனால், ரோஷனாரா பேகம் அவர்களின் திறமையையும், ஆர்வத்தையும் அறிந்த எம் எஸ் விஸ்வநாதன், தயாரிப்பாளர் ஜி என் வேலுமணியிடம் இவருக்கு பாடல் எழுத வாய்ப்பு தரவேண்டும் என அழுத்தம் தர, அவரும் சம்மதித்தார். 1968ம் ஆண்டு “சைனா டவுன்” என்ற ஹிந்தி திரைப்படத்தின் மறு உருவாக்கமான “குடியிருந்த கோயில்” என்ற திரைப்படத்தில் பாடல் எழுதும் வாய்ப்பும் கிடைக்கப் பெற்றார் ரோஷனாரா பேகம்.

“குங்குமப் பொட்டின் மங்கலம் நெஞ்சமிரண்டின் சங்கமம்” என்று பல்லவியை எழுதித் தர, தயாரிப்பு தரப்பிலிருந்தும் பாடலின் பல்லவி உடனே ஓகே செய்யப்பட்டது. காரணம் இந்தப் படத்திற்கு அவர்கள் முதலில் வைத்த பெயர் “சங்கமம்”. விபரம் ஏதும் அறியாத ரோஷனாரா பேகம் எழுதித் தந்த பல்லவியில் படத்தின் முந்தைய பெயரான “சங்கமம்” என்ற வார்த்தை தற்செயலாக இடம் பெற்றதில் தயாரிப்பு தரப்பிற்கு ஆச்சர்யத்தோடு கூடிய மிகுந்த மகிழ்ச்சியும் கிடைக்க, முழுப் பாடலையும் எழுதித் தந்தார் ரோஷனாரா பேகம்.

இஸ்லாமிய பெண் பாடலாசிரியரான ரோஷனாரா பேகம் கைவண்ணத்தில் உருவான “குங்குமப் பொட்டின் மங்கலம் நெஞ்சமிரண்டின் சங்கமம்” என்ற “குடியிருந்த கோயில்” திரைப்படப் பாடல் அன்றிலிருந்து இன்றுவரை இளம் உள்ளங்களை கொள்ளை கொள்ளும் ஒரு வசீகரப் பாடலாகவே இருக்கின்றது என்றால் அது மிகையன்று. தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான எம் ஜி ஆரும், ஜெயலலிதாவும் இணைந்து நடித்திருக்கும் இந்தப் பாடலே கவிஞர் ரோஷனாரா பேகம் எழுதிய முதல் மற்றும் இறுதிப் பாடலாக அமைந்தது அவருக்குமட்டுமின்றி திரையிசை ரசிகர்களுக்கும் ஒரு பேரிழப்பே.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
புதிய தோற்றத்திற்கு மாறிய சாய் தன்ஷிகாபுதிய தோற்றத்திற்கு மாறிய சாய் ... பிளாஷ்பேக்: ஆண்டுகள் 60 ஆனாலும் என்றும் 20 ஆக காட்சி தரும் “காதலிக்க நேரமில்லை” படத்தில் இத்தனை சுவாரஸ்யங்களா? பிளாஷ்பேக்: ஆண்டுகள் 60 ஆனாலும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in