'மெய்யழகன்' நீளம் குறைக்கப்படுமா? - பிடிவாதம் பிடிக்கும் பிரேம்குமார் | என்கவுன்டர் அதிகாரியின் இன்னொரு பக்கம் : வேட்டையன் குறித்து பேசிய ஞானவேல் | இயக்குனர் சுகுமாருக்கு எல்லா விஷயமும் தெரியும் : ஜானி மாஸ்டர் வாக்குமூலம் | ஒரு வார இடைவெளியில் வெளியாகும் பஹத் பாசிலின் 2 படங்கள் | மகளின் குற்றச்சாட்டு : கண்ணீர் விட்டு அழுத நடிகர் பாலா | சவ்பின் சாஹிரின் மிகப்பெரிய ரசிகன் நான் : அரவிந்த்சாமி | 'தேவரா' முதல் நாள் வசூல் 172 கோடி என அறிவிப்பு | புகழ் குழந்தையின் முதல் பிறந்தநாளில் வாழ்த்திய பிரபலங்கள் | பிளாஷ்பேக் : விமர்சகர்கள் கிழித்து தொங்க விட்டபோதும் மக்கள் வசூலை அள்ளி கொடுத்த படம் | ஒரே படத்திற்கு ரஜினியின் 3 பட டைட்டில் |
ஒரு படத்தின் நீளம் இரண்டு மணி நேரம் அல்லது இரண்டரை மணி நேரம் இருந்தால்தான் ரசிகர்கள் பொறுமையாகப் பார்த்து ரசிக்கிறார்கள். மூன்று மணி நேரம் ஓடும் படங்கள் ரசிகர்களின் பொறுமையை சோதிப்பதாகவே உள்ளன.
இதற்கு முன்பு வெளிவந்த 'தி கோட், இந்தியன் 2' ஆகிய படங்களின் நீளம் மூன்று மணி நேரம் ஓடக் கூடிய படங்களாக இருந்தன. அதுவும் அந்தப் படங்களின் வரவேற்பு குறைய முக்கியக் காரணங்கள்தான். 'இந்தியன் 2' படத்தின் நீளம் குறித்து கடும் விமர்சனம் எழுந்ததும் அடுத்த சில நாட்களில் 12 நிமிடக் காட்சிகளை வெட்டி எறிந்தார்கள்.
நேற்று வெளியான 'மெய்யழகன்' படம் 2 மணி நேரம் 57 நிமிடங்கள் ஓடுகிறது. படத்தின் இடைவேளைக்குப் பிறகான பிற்பகுதி மிகவும் நீளமாக இருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது. அதிலும் கார்த்தி தன்னைப் பற்றிச் சொல்லும் காட்சிகள் படத்தின் மையக் கதையிலிருந்து விலகியிருப்பதாகப் பலரும் கருத்து தெரிவித்துள்ளார்கள். அதனால், அந்தக் காட்சிகளை நீக்கி விடலாம் எனத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் இயக்குனரிடம் சொன்னார்களாம்.
ஆனால், படத்தின் இயக்குனர் பிரேம்குமார் அவற்றை நீக்க மாட்டேன், நேரத்தையும் குறைக்க மாட்டேன் என பிடிவாதம் பிடிக்கிறாராம். தெலுங்கில் மட்டும் அந்தக் காட்சிகளைக் கொஞ்சம் குறைத்துள்ளார்களாம். தமிழிலும் அவற்றை நீக்கினால் படத்தைப் பற்றிய நெகட்டிவ் விமர்சனங்கள் குறைய வாய்ப்புண்டு.
இரண்டு படங்களை மட்டுமே இயக்கியள்ள இயக்குனர் இவ்வளவு பிடிவாதம் பிடிக்கக் கூடாது என கோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள்.