‛ஏஸ்' எனக்கு ஸ்பெஷலான படம்: ருக்மணி வசந்த் | ‛‛100 வருஷம் ஆனாலும் பாசம் மாறாது'' : மதுரை மக்கள் பற்றி விஷால் கருத்து | ‛‛எனக்கு பிடித்த மதுரையும், மீனாட்சி அம்மனும்...'': ஐஸ்வர்யா லட்சுமி நெகிழ்ச்சி | அம்ரிதா பிரிதமின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க விரும்பும் நிம்ரத் கவுர் | இனி ஹீரோ தான்: நடிகர் சூரி 'பளீச்' | பிளாஷ்பேக்: சர்வதேச விருதினை வென்றெடுத்த முதல் தமிழ் திரைப்படம் “வீரபாண்டிய கட்டபொம்மன்” | ஜுன் மாதத்தில் 4 பான் இந்தியா திரைப்படங்கள் ரிலீஸ் | 'விக்ரம்' டிரைலர் சாதனையை முறியடித்த 'தக் லைப்' டிரைலர் | நயன்தாரா நடிப்பது பற்றிய வீடியோ, 'இவ்ளோ சுமாரா' எடுத்திருக்க வேண்டுமா? | ஆட்டுக்கார அலமேலு, முத்து, தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் - ஞாயிறு திரைப்படங்கள் |
ஒரு படத்தின் நீளம் இரண்டு மணி நேரம் அல்லது இரண்டரை மணி நேரம் இருந்தால்தான் ரசிகர்கள் பொறுமையாகப் பார்த்து ரசிக்கிறார்கள். மூன்று மணி நேரம் ஓடும் படங்கள் ரசிகர்களின் பொறுமையை சோதிப்பதாகவே உள்ளன.
இதற்கு முன்பு வெளிவந்த 'தி கோட், இந்தியன் 2' ஆகிய படங்களின் நீளம் மூன்று மணி நேரம் ஓடக் கூடிய படங்களாக இருந்தன. அதுவும் அந்தப் படங்களின் வரவேற்பு குறைய முக்கியக் காரணங்கள்தான். 'இந்தியன் 2' படத்தின் நீளம் குறித்து கடும் விமர்சனம் எழுந்ததும் அடுத்த சில நாட்களில் 12 நிமிடக் காட்சிகளை வெட்டி எறிந்தார்கள்.
நேற்று வெளியான 'மெய்யழகன்' படம் 2 மணி நேரம் 57 நிமிடங்கள் ஓடுகிறது. படத்தின் இடைவேளைக்குப் பிறகான பிற்பகுதி மிகவும் நீளமாக இருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது. அதிலும் கார்த்தி தன்னைப் பற்றிச் சொல்லும் காட்சிகள் படத்தின் மையக் கதையிலிருந்து விலகியிருப்பதாகப் பலரும் கருத்து தெரிவித்துள்ளார்கள். அதனால், அந்தக் காட்சிகளை நீக்கி விடலாம் எனத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் இயக்குனரிடம் சொன்னார்களாம்.
ஆனால், படத்தின் இயக்குனர் பிரேம்குமார் அவற்றை நீக்க மாட்டேன், நேரத்தையும் குறைக்க மாட்டேன் என பிடிவாதம் பிடிக்கிறாராம். தெலுங்கில் மட்டும் அந்தக் காட்சிகளைக் கொஞ்சம் குறைத்துள்ளார்களாம். தமிழிலும் அவற்றை நீக்கினால் படத்தைப் பற்றிய நெகட்டிவ் விமர்சனங்கள் குறைய வாய்ப்புண்டு.
இரண்டு படங்களை மட்டுமே இயக்கியள்ள இயக்குனர் இவ்வளவு பிடிவாதம் பிடிக்கக் கூடாது என கோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள்.