ஜூனியர் என்டிஆர் ரசிகர்களை எச்சரித்த வேதிகா | 'மெய்யழகன்' நீளம் குறைக்கப்படுமா? - பிடிவாதம் பிடிக்கும் பிரேம்குமார் | என்கவுன்டர் அதிகாரியின் இன்னொரு பக்கம் : வேட்டையன் குறித்து பேசிய ஞானவேல் | இயக்குனர் சுகுமாருக்கு எல்லா விஷயமும் தெரியும் : ஜானி மாஸ்டர் வாக்குமூலம் | ஒரு வார இடைவெளியில் வெளியாகும் பஹத் பாசிலின் 2 படங்கள் | மகளின் குற்றச்சாட்டு : கண்ணீர் விட்டு அழுத நடிகர் பாலா | சவ்பின் சாஹிரின் மிகப்பெரிய ரசிகன் நான் : அரவிந்த்சாமி | 'தேவரா' முதல் நாள் வசூல் 172 கோடி என அறிவிப்பு | புகழ் குழந்தையின் முதல் பிறந்தநாளில் வாழ்த்திய பிரபலங்கள் | பிளாஷ்பேக் : விமர்சகர்கள் கிழித்து தொங்க விட்டபோதும் மக்கள் வசூலை அள்ளி கொடுத்த படம் |
தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் நடித்த தேவரா என்ற படம் நேற்று திரைக்கு வந்தது. ஹைதராபாத்தில் உள்ள ஒரு தியேட்டரில் ஜூனியர் என்டிஆரின் ரசிகர்கள் கிடா வெட்டி அந்த ரத்தத்தை ஜூனியர் என்டிஆரின் போஸ்டர்கள், கட் அவுட்டுகளில் அபிஷேகம் செய்துள்ளார்கள். இது குறித்த வீடியோக்கள் வெளியானதை அடுத்து ரசிகர்களின் இந்த செயல்பாட்டை நடிகை வேதிகா கடுமையாக கண்டித்துள்ளார்.
அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‛‛இது மிகவும் கொடுமையான செயல். அந்த பாவப்பட்ட குழந்தைக்காக என்னுடைய இதயம் ரத்தம் சிந்துகிறது. இதுபோன்ற சித்ரவதை கொடுமை யாருக்கும் நடக்கக்கூடாது. குரலற்ற அப்பாவி ஜீவனை இப்படியா வதைப்பது? அந்த அப்பாவிக்காக நான் பிரார்த்திக்கிறேன். அது இறைவனின் கைகளில் தஞ்சம் அடையட்டும். ரசிகர்கள் கொண்டாட்டம் என்பதின் பேரில் இனிமேலும் இதுபோன்று எந்த ஜீவன்களையும் கொல்ல வேண்டாம். தயவு செய்து இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள்'' என்று தெரிவித்து இருக்கிறார் வேதிகா.