ரஜினி, கமல் இணையும் படத்தை இயக்குகிறேனா? : பிரதீப் ரங்கநாதன் சொன்ன பதில் | அஜித் 64வது படத்தில் இயக்குனர் சரண் பணியாற்றுகிறாரா? | காந்தாரா சாப்டர் 1 கிளைமாக்ஸ் சவால்களை வெளியிட்ட ரிஷப் ஷெட்டி | பிரியங்கா மோகனின் ‛மேட் இன் கொரியா' | பாலாஜி மோகன், அர்ஜுன் தாஸ் இணையும் ‛லவ்' | சூரியை கதாநாயகனாக வைத்து படம் இயக்கும் சுசீந்திரன் | கோர்ட் ஸ்டேட் vs நோ படி படத்தின் தமிழ் ரீமேக் புதிய அப்டேட் | 2025, இந்தியாவில் 500 கோடி கடந்த இரண்டாவது படம் 'காந்தாரா சாப்டர் 1' | பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? |
விசாகப்பட்டினத்தில் இருந்து கூலி படப்பிடிப்பு முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய, நடிகர் ரஜினி விமான நிலையத்தில் நிருபர்களை சந்தித்தார். அப்போது, ஆன்மிகவாதியாக திருப்பதி லட்டு சர்ச்சை குறித்து என்ன நினைக்கிறீர்கள் என ரஜினியிடம் நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, 'ஸாரி நோ கமென்ட்ஸ்' எனக் கூறி கருத்து கூறுவதை தவிர்த்தார் ரஜினி.
மேலும் அவர், 'தர்பாருக்கு பிறகு போலீசாக நடித்தது வித்தியாசமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. தர்பார் போன்று வேட்டையன் இருக்காது, வித்தியாசமாக இருக்கும். வேட்டையன் படத்திற்கு நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கிறது. அவை அனைத்தும் நிச்சயம் நிறைவேறும் என்றார் ரஜினி.
சினிமாவில் 50 ஆண்டுகளை எட்டியுள்ளீர்கள். உங்களை மாதிரி திரைத்துறைக்கு வர நினைக்கும் இளைஞர்களுக்கு உங்கள் அனுபவத்தில் என்ன சொல்ல நினைக்கிறீர்கள் என நிருபர் எழுப்பிய கேள்விக்கு, ' இது ரொம்ப பெரிய கேள்விங்க. வணக்கம், வணக்கம், நன்றி' என நடிகர் ரஜினி பதில் அளித்தார்.