சீதா மாதாவின் ஆசீர்வாதம் : சாய் பல்லவி மகிழ்ச்சி | பாலிவுட்டில் தென்னிந்திய நடிகர்களுக்கு மரியாதை இல்லையா : பிரியாமணி பதில் | 'பாபநாசம்' படத்தில் என் முதல் சாய்ஸ் ரஜினிதான்: ஜீத்து ஜோசப் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் | தனுஷூக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே! | அஜித் பட ஹீரோயின் யார் | சினிமாவில் நடப்பதை மட்டும் பூதக் கண்ணாடி வச்சு பாக்காதீங்க : குஷ்பு காட்டம் | பழனி முருகன் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா | அர்ஜுன் தாஸ் குரலைப் பாராட்டிய பவன் கல்யாண் | சுதீப் 47 படத்தை இயக்கப் போகும் 'மேக்ஸ்' இயக்குனர் | புதிய சாதனை படைத்த 'ஹரிஹர வீரமல்லு' டிரைலர் |
தமிழ் சினிமாவில் மறக்க முடியாத ஒரு நடிகர் விஜயகாந்த். கேப்டன் என அழைக்கப்படும் அவர் மறைந்து ஓராண்டை நெருங்குகிறது. இன்றும் மக்கள் மனதில் வாழ்ந்து வரும் அவரை கவுரவிக்கும் விதமாக படங்களில் அவரை காண்பித்தோ, அவரது பாடல்களை ஒலிக்க விட்டோ பெருமை செய்து வருகிறார்கள். சமீபத்தில் விஜய்யின் ‛தி கோட்' படத்தில் ஏஐ மூலம் அவரை காண்பித்தனர்.
கடந்தவாரம் வெளியான லப்பர் பந்து படத்தில் கதாநாயகனான தினேஷை, விஜயகாந்த்தின் ரசிகராகக் காட்டினர். அவரது வீட்டு வெளியே விஜயகாந்தின் உருவப் படத்தை வரைந்து வைத்தனர். அதோடு விஜயகாந்த் நடித்து இளையராஜா இசையில் வந்த 'பொன்மனச் செல்வன்' படத்தில் இடம் பெற்ற 'நீ பொட்டு வச்ச தங்கக் குடம்' என்ற பாடலை அவ்வப்போது ஒலிக்கவிட்டனர். விஜயகாந்த் சம்பந்தப்பட்ட இந்தக் காட்சிகள் அனைத்து சென்டர் ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. இதுதான் விஜயகாந்தைப் பெருமைப்படுத்தும் படம் என அவரது ரசிகர்களும் பாராட்டி வருகிறார்கள்.
இதுபற்றி விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா கூறுகையில், 'திரைப்படங்களில் கேப்டனின் பாடலை, போஸ்டர்களைப் பயன்படுத்தினால் யாரிடமும் காப்புரிமை எல்லாம் கேட்க மாட்டோம். கேப்டன் எங்களின் சொத்தல்ல, மக்களின் சொத்து,' என்றார்.