சின்னத்திரை காமெடி நடிகை ஷர்மிளா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு பதிவு | சித்தார்த்தை திருமணம் செய்ய இதுதான் காரணம் : அதிதி ராவ் வெளியிட்ட தகவல் | மீண்டும் அஜித் உடன் இணைந்தால் மகிழ்ச்சியே : ஆதிக் ரவிச்சந்திரன் | ஓடும் பேருந்தில் கொலை : பரபரனு நகரும் டென் ஹவர்ஸ் டிரைலர் | புத்திசாலித்தனம் இல்லாத முடிவா? : விஜய் சேதுபதிக்கு ஆதரவாக குரல் கொடுத்த சாந்தனு | நடிகையின் ஆபாச வீடியோ.... நாசமா போங்க என பாடகி சின்மயி காட்டம் | ஏப்ரல் மாதத்தில்….. மூன்றே மூன்று முக்கிய படங்கள் போதுமா ? | இரண்டே நாட்களில் 100 கோடி கடந்த 'சிக்கந்தர்' | 'வா வாத்தியார்' வராமல் 'சர்தார் 2' வருவாரா ? | இரண்டு படம் ஜெயித்து விட்டால், இப்படியா… |
தமிழ் சினிமாவில் மறக்க முடியாத ஒரு நடிகர் விஜயகாந்த். கேப்டன் என அழைக்கப்படும் அவர் மறைந்து ஓராண்டை நெருங்குகிறது. இன்றும் மக்கள் மனதில் வாழ்ந்து வரும் அவரை கவுரவிக்கும் விதமாக படங்களில் அவரை காண்பித்தோ, அவரது பாடல்களை ஒலிக்க விட்டோ பெருமை செய்து வருகிறார்கள். சமீபத்தில் விஜய்யின் ‛தி கோட்' படத்தில் ஏஐ மூலம் அவரை காண்பித்தனர்.
கடந்தவாரம் வெளியான லப்பர் பந்து படத்தில் கதாநாயகனான தினேஷை, விஜயகாந்த்தின் ரசிகராகக் காட்டினர். அவரது வீட்டு வெளியே விஜயகாந்தின் உருவப் படத்தை வரைந்து வைத்தனர். அதோடு விஜயகாந்த் நடித்து இளையராஜா இசையில் வந்த 'பொன்மனச் செல்வன்' படத்தில் இடம் பெற்ற 'நீ பொட்டு வச்ச தங்கக் குடம்' என்ற பாடலை அவ்வப்போது ஒலிக்கவிட்டனர். விஜயகாந்த் சம்பந்தப்பட்ட இந்தக் காட்சிகள் அனைத்து சென்டர் ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. இதுதான் விஜயகாந்தைப் பெருமைப்படுத்தும் படம் என அவரது ரசிகர்களும் பாராட்டி வருகிறார்கள்.
இதுபற்றி விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா கூறுகையில், 'திரைப்படங்களில் கேப்டனின் பாடலை, போஸ்டர்களைப் பயன்படுத்தினால் யாரிடமும் காப்புரிமை எல்லாம் கேட்க மாட்டோம். கேப்டன் எங்களின் சொத்தல்ல, மக்களின் சொத்து,' என்றார்.