என்கவுன்டர் அதிகாரியின் இன்னொரு பக்கம் : வேட்டையன் குறித்து பேசிய ஞானவேல் | இயக்குனர் சுகுமாருக்கு எல்லா விஷயமும் தெரியும் : ஜானி மாஸ்டர் வாக்குமூலம் | ஒரு வார இடைவெளியில் வெளியாகும் பஹத் பாசிலின் 2 படங்கள் | மகளின் குற்றச்சாட்டு : கண்ணீர் விட்டு அழுத நடிகர் பாலா | சவ்பின் சாஹிரின் மிகப்பெரிய ரசிகன் நான் : அரவிந்த்சாமி | 'தேவரா' முதல் நாள் வசூல் 172 கோடி என அறிவிப்பு | புகழ் குழந்தையின் முதல் பிறந்தநாளில் வாழ்த்திய பிரபலங்கள் | பிளாஷ்பேக் : விமர்சகர்கள் கிழித்து தொங்க விட்டபோதும் மக்கள் வசூலை அள்ளி கொடுத்த படம் | ஒரே படத்திற்கு ரஜினியின் 3 பட டைட்டில் | ஏஐ தொழில்நுட்பத்தில் இளமையான ஜாக்கிசான் படம் : தமிழ் உள்ளிட்ட 4 மொழிகளில் வெளியாகிறது |
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வேட்டையன். வரும் அக்டோபர் 10ம் தேதி இந்த படம் வெளியாக உள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் இருந்து சமீபத்தில் வெளியான மனசிலாயோ பாடல் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் அதைத் தொடர்ந்து வெளியான ஒரு டீசரில் ரஜினிகாந்த் என்கவுன்டர் ஸ்பெசலிஸ்ட் ஆக இது நடித்துள்ளார் என அதிகாரப்பூர்வமாக அவரது கதாபாத்திரம் வெளிப்பட்டது.
இதற்கு முன்பு தர்பார் படத்திலும் கூட ரஜினிகாந்த் இது போன்ற ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால் அதிலிருந்தும் இதற்கு முன்பு பல படங்களில் என்கவுன்டர் போலீஸ் அதிகாரிகள் காட்டப்பட்டதற்கு முற்றிலும் மாறாகவும் இதில் ரஜினிகாந்தின் கதாபாத்திரம் வேறுபடுத்திக் காட்டப்பட்டுள்ளதாக சமீபத்தில் கூறியுள்ளார் இயக்குனர் ஞானவேல்.
இந்த கதாபாத்திரம் பற்றி மேலும் அவர் கூறும்போது, “ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பிறகு ரஜினி சாரின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது. அதை ஈடு கட்டும் விதமாக வேட்டையன் படத்தில் பாடல்களும் சண்டைக் காட்சிகளும் இருக்கின்றன. அதேசமயம் அதன் மூலம் நான் என்ன சொல்ல விரும்புகிறானோ அதிலிருந்து விலகிச் செல்லவும் இல்லை. முந்தைய படங்களில் நாம் பார்த்த என்கவுன்டர் அதிகாரிகளிலிருந்து இது எப்படி வித்தியாசப்படுகிறது என்றால் இதில் என்கவுன்டர் அதிகாரிகளின் பின்புல கதைகளை பற்றி சொல்லி இருக்கிறோம். என்கவுன்டர் குறித்த அவர்களது எண்ண ஓட்டங்கள் எப்படி இருக்கும் என்பதன் மீது வெளிச்சம் பாய்சி இருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.