ஜனநாயகன்: வழக்கு போடாமல் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? | 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'ரவுடி பேபி' லிரிக் வீடியோ | விபீஷணனாக நடிக்கவில்லை ; விஜய்சேதுபதி திட்டவட்டம் | மோகன்லால் மம்முட்டிக்கு நான் வில்லன் தான் ; உறுதி செய்த பஹத் பாசில் | பிப்ரவரி 26ல் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா திருமணம்? | அப்படி ஒன்றும் அவசியம் இல்லை ; ஓடிடி நிறுவனத்தை அதிர வைத்த 'சூ ப்ரம் சோ' தயாரிப்பாளர் | ஜனநாயகன் பட வழக்கை வாபஸ் பெற்றது தயாரிப்பு நிறுவனம் | டொவினோ தாமஸ் படத்தில் இணைந்த 'சர்வம் மாயா' நாயகி | பிளாஷ்பேக் ; ரஜினி ரசிகர்களின் எதிர்ப்பை மனதில் வைத்து பாக்யராஜ் புத்திசாலித்தனமாக செய்த காரியம் | 'பேட்ரியாட்' டப்பிங்கை நிறைவு செய்த மோகன்லால் |

தமிழ் மட்டுமல்லாது தென்னிந்திய அளவில் பிரபல நடன இயக்குனராக உருவெடுத்துள்ளவர் ஜானி மாஸ்டர். விஜய். அல்லு அர்ஜுன் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களின் வித்தியாசமான நடனங்களில் இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. தன்னிடம் உதவி நடன இயக்குனராக பணியாற்றிய பெண்ணை பாலியல் ரீதியாக பலாத்காரம் செய்தார் என அவர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு சமீபத்தில் கைது செய்யப்பட்டார். தற்போது நீதிமன்ற உத்தரவின்படி போலீஸார் அவரை நான்கு நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். இந்த விசாரணையின் போது அவர் தன் மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகள் ஆதாரம் அற்றவை என்று கூறியுள்ளாராம்.
இதுகுறித்து போலீசார் தரப்பிலிருந்து வெளியான சில தகவல்களின்படி ஜானி மாஸ்டர் கூறும் போது, “சம்பந்தப்பட்ட அந்தப் பெண் தானாகவே என்னிடம் வந்து வாய்ப்பு கேட்டார். அவரது திறமையை அறிந்து என்னிடம் நடன உதவி இயக்குனராக சேர்த்துக் கொண்டேன். ஒரு கட்டத்தில் அவர் என்னை திருமணம் செய்து கொள்ளுமாறு டார்ச்சர் செய்யவும் மிரட்டவும் ஆரம்பித்தார். இந்த விஷயம் குறித்து புஷ்பா படப்பிடிப்பில் இருந்த சமயத்திலேயே இயக்குனர் சுகுமாரிடம் நான் கூறியுள்ளேன். அவரும் ஒரு முறை அந்த பெண்ணை அழைத்து அறிவுரை கூறினார். ஆனாலும் அந்தப் பெண்ணிடம் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இந்த குற்றச்சாட்டு மற்றும் புகாரின் பின்னணியில் எனக்கு எதிராக ஒரு சதி நடந்து இருக்கிறது. என்னுடைய வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் இது போன்ற ஒரு செயலில் இறங்கியுள்ளார்கள்” என்று கூறியுள்ளாராம்.




