'தக் லைப்' முடித்துவிட்டு 'ஏஐ' படிக்கச் சென்ற கமல்ஹாசன் | படே மியான் சோட்டே மியான் - இயக்குனர் மீது தயாரிப்பாகர்கள் புகார் | கார்த்தி, 'மெய்யழகன்' குழுவினருக்கு வாழ்த்து சொன்ன பவன் கல்யாண் | என்னை டபுள் ஆக்க முயற்சிக்க வேண்டாம் ; ஐஸ்வர்ய லட்சுமி | லப்பர் பந்துவை பாராட்டிய கிரிக்கெட் வீரர் அஸ்வின் | ரேணுகா சுவாமி கொலை வழக்கில் 3 பேருக்கு ஜாமின் ; தர்ஷனின் ஜாமீன் மனு செப்.,27க்கு தள்ளிவைப்பு | சூப்பர் ஸ்டாரை சந்தித்த புகழ் | இட்லி கடையில் நான் இல்லை ; தெளிவுபடுத்திய அசோக் செல்வன் | பிக்பாஸுக்கு போகவில்லை ஆனால்? ஜெகன் வெளியிட்ட நக்கல் பதிவு | சின்னத்திரை நிகழ்ச்சியில் விஜய் ஆண்டனி! |
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கன்னட திரையுலகின் பிரபல நடிகராக இருக்கும் நடிகர் தர்ஷன் தனது ரசிகரான ரேணுகா சாமி என்பவரை தனது பண்ணை வீட்டில் வைத்துக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது காதலி பவித்ரா கவுடா மற்றும் இந்த கொலைக்கு உடந்தையாக இருந்தவர்கள் உள்ளிட்ட 17 பேர் இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டனர். முதலில் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த தர்ஷன் அங்கே முறைகேடாக வசதிகளை பெற்றார் என்ற குற்றச்சாட்டை தொடர்ந்து தற்போது பெல்லாரி சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தற்போது சிறையில் 100 நாட்களை கழித்து விட்ட தர்ஷன் தொடர்ந்து தனக்கு ஜாமீன் கேட்டு மனு செய்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் தனக்கு ஜாமீன் வழங்குமாறு மனு தாக்கல் செய்திருந்த நிலையில் அவரது மனுவை விசாரித்த நீதிமன்றம் வரும் செப்டம்பர் 27ம் தேதிக்கு அதன் விசாரணையை தள்ளி வைத்தது. அதேசமயம் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 15, 16, 17 எண் கொண்ட குற்றவாளிகள் மூவருக்கு மட்டும் ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.