கூலி படத்தில் ரஜினி உடன் நடித்தது ஸ்பெஷலான அனுபவம் : பூஜா ஹெக்டே | அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? : ரவி மோகன் கொடுத்த பதில் | விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே? | பாங்காக் பறந்த இட்லி கடை படக்குழு | 24 லட்சம் வாடகையில் புதிய அபார்ட்மென்ட்டுக்கு குடிபெயர்ந்த ஷாருக்கான் | உடை மாற்ற உதவிக்கு வருவேன் என அடம்பிடித்த போதை நடிகர் : மலையாள நடிகை அதிர்ச்சி தகவல் | ஜெய ஜெய ஜெய ஜெய ஹே ஹிந்தி ரீமேக்கை அமீர்கான் கைவிட்டது ஏன்? : நடிகர் புது தகவல் | மீரா ஜாஸ்மின் பெயர் என் காதுகளில் ஒலிக்காத நாளே இல்லை ; சிலாகித்த நயன்தாரா | கேரள முதல்வரின் சொந்த ஊர் கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் | கிடப்பில் இருக்கும் பிரபுதேவா படத்தை வெளியிட முயற்சி |
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கன்னட திரையுலகின் பிரபல நடிகராக இருக்கும் நடிகர் தர்ஷன் தனது ரசிகரான ரேணுகா சாமி என்பவரை தனது பண்ணை வீட்டில் வைத்துக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது காதலி பவித்ரா கவுடா மற்றும் இந்த கொலைக்கு உடந்தையாக இருந்தவர்கள் உள்ளிட்ட 17 பேர் இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டனர். முதலில் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த தர்ஷன் அங்கே முறைகேடாக வசதிகளை பெற்றார் என்ற குற்றச்சாட்டை தொடர்ந்து தற்போது பெல்லாரி சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தற்போது சிறையில் 100 நாட்களை கழித்து விட்ட தர்ஷன் தொடர்ந்து தனக்கு ஜாமீன் கேட்டு மனு செய்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் தனக்கு ஜாமீன் வழங்குமாறு மனு தாக்கல் செய்திருந்த நிலையில் அவரது மனுவை விசாரித்த நீதிமன்றம் வரும் செப்டம்பர் 27ம் தேதிக்கு அதன் விசாரணையை தள்ளி வைத்தது. அதேசமயம் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 15, 16, 17 எண் கொண்ட குற்றவாளிகள் மூவருக்கு மட்டும் ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.