‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
விஜய், பிரசாந்த், பிரபுதேவா மற்றும் பலர் நடிக்க வெங்கட் பிரபு இயக்கத்தில் செப்டம்பர் 5ம் தேதி வெளியான படம் 'தி கோட்'. இப்படத்தின் ஓட்டம் ஏறக்குறைய இந்த வாரத்துடன் முடிவுக்கு வந்துவிடும். இந்த வாரம் செப்டம்பர் 27ம் தேதி நான்கு புதிய படங்கள் வெளிவருவதால் சில தியேட்டர்களில் மட்டுமே 'தி கோட்' தொடர வாய்ப்புள்ளது.
இதனிடையே, கடந்த 18 நாட்களில் இப்படம் தமிழகத்தில் மட்டும் சுமார் 200 கோடி வசூலைக் கடந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அதன் மூலம் கிடைத்த 'ஷேர்' தொகையும் 100 கோடியைக் கடந்திருக்கும் என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.
தமிழகத்தைப் பொறுத்தவரையில் இத்தனை ஆண்டு கால வரலாற்றில் மூன்று படங்கள் மட்டுமே 200 கோடி வசூலைக் கடந்துள்ளது. 'லியோ, பொன்னியின் செல்வன் 1' ஆகிய படங்களை அடுத்து தற்போது 'தி கோட்' படம் அந்த சாதனையைப் புரிந்துள்ளது. அந்த மூன்றில் இரண்டு படங்கள் விஜய் படங்கள் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.
'தி கோட்' வசூல் இந்த வாரத்தில் மொத்தமாக 450 கோடியைக் கடக்கலாம் என்பது கூடுதல் தகவல்.