ஏவிஎம் சரவணன் மறைவு : அஜித், விஜய், விக்ரம் அஞ்சலி செலுத்தவில்லை | மரணத்தை வைத்து மீம்ஸ் போடுவதா? ஜான்வி கபூர் கடும் ஆதங்கம்! | ஏவிஎம் சரவணன் உடல் தகனம் | உங்கள் பெயர் சொல்லும் பிள்ளைகளில் நானும் ஒருவன் : சரவணனுக்கு கமல் புகழ் அஞ்சலி | இந்த வார ஓடிடி ரிலீஸ்: சிறிய படங்கள் தான்....ஆனா ஒவ்வொன்னும் செம'வொர்த்'..! | 'பாகுபலி தி எபிக்' புரமோஷனுக்காக ஜப்பான் சென்ற பிரபாஸ்! | மம்முட்டியின் களம்காவல் படத்தில் 22 கதாநாயகிகள் | ஏர் இந்தியா விமான சேவை மீது சிதார் இசைக் கலைஞர் ரவிசங்கரின் மகள் குற்றச்சாட்டு | துல்கர் சல்மானுக்கு தான் விருது கிடைத்திருக்க வேண்டும் : நடிகர் விநாயகன் ஆதங்கம் | தொடரும் பட ஹிந்தி ரீமேக்கில் அஜய் தேவகன் : இயக்குனர் தருண் மூர்த்தியின் சாய்ஸ் |

தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி ஆக்ஷன் ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் ஜுனியர் என்டிஆர். ஆனால், ராஜமவுலி இயக்கத்தில் 'ஆர்ஆர்ஆர்' படத்தில் நடித்த பின் அவர் உலக அளவில் புகழ் பெற்றுவிட்டார். அப்படத்தில் இடம் பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் ஆஸ்கர் விருதை வென்றதும் அதற்கு ஒரு காரணம். அப்படத்திற்குப் பிறகு அவர் பான் இந்தியா நடிகராக உயர்ந்துவிட்டார்.
'ஆர்ஆர்ஆர்' படத்தில் ராம் சரணும் மற்றொரு கதாநாயகனாக நடித்திருந்தார். அப்படத்திற்குப் பின் அவர்கள் இருவரும் தனி கதாநாயகர்களாக நடித்துள்ள படங்கள் அடுத்தடுத்து வர உள்ளன. ராம் சரண் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் 'கேம் சேஞ்சர்' படம் இந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜுனியர் என்டிஆர் தனி கதாநாயகனாக நடித்துள்ள 'தேவரா' படத்தின் முதல் பாகம் இந்த வாரம் செப்டம்பர் 27ம் தேதி வெளியாக உள்ளது. இப்படம் அவரது தனி படங்களிலேயே அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ள படமாக சாதனை புரிந்துள்ளது. தெலுங்கு மாநிலங்களான ஆந்திரா, தெலங்கானா தியேட்டர் உரிமை மட்டும் 110 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாகத் தகவல். மற்ற மாநிலங்கள், வெளிநாடுகள் சேர்த்து ஒட்டு மொத்தமாக 180 கோடி வரை வியபாரம் நடைபெற்றுள்ளதாம்.
இப்படம் தென் மாநிலங்களில் மட்டுமல்லாது வட மாநிலங்களிலும் வெற்றி பெற்றால் தெலுங்கு நடிகரான பிரபாஸுக்குப் பிறகு பான் இந்தியா நடிகராக தனி அடையாளத்துடன் உயர்வார் ஜுனியர் என்டிஆர்.