பிளாஷ்பேக் : கிருஷ்ணராக நடித்தவர் சினிமாவுக்காக அர்ஜூனனாக மாறினார் | எஸ்.பி.பாலசுப்ரமணியம் வாழ்ந்த தெருவுக்கு அவரது பெயர்: மகன் சரண் கோரிக்கை | யு டியூப் டிரெண்டிங்கில் போட்டி போடும் 'தி கோட், வேட்டையன்' | நடித்த படத்தின் விழாவை புறக்கணித்த ஷெரின், சம்யுக்தா | சரத்குமாருடன் நடிக்கும் சண்முக பாண்டியன் | பழநி பஞ்சாமிர்தம் பற்றி சர்ச்சை : சினிமா இயக்குனர் மோகன்.ஜி கைது | மூன்று மணி நேரம் ஓடப் போகும் 'மெய்யழகன்' | கோலங்கள் தில்லாவுக்கு இந்த வயதில் கல்யாணமா? | கரகாட்டக்காரன் கனகாவா இது? | மணிமேகலைக்கு பதிலடி கொடுத்த பிரபலங்கள் : இப்படியா அசிங்கப்படுத்துவது? |
தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி ஆக்ஷன் ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் ஜுனியர் என்டிஆர். ஆனால், ராஜமவுலி இயக்கத்தில் 'ஆர்ஆர்ஆர்' படத்தில் நடித்த பின் அவர் உலக அளவில் புகழ் பெற்றுவிட்டார். அப்படத்தில் இடம் பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் ஆஸ்கர் விருதை வென்றதும் அதற்கு ஒரு காரணம். அப்படத்திற்குப் பிறகு அவர் பான் இந்தியா நடிகராக உயர்ந்துவிட்டார்.
'ஆர்ஆர்ஆர்' படத்தில் ராம் சரணும் மற்றொரு கதாநாயகனாக நடித்திருந்தார். அப்படத்திற்குப் பின் அவர்கள் இருவரும் தனி கதாநாயகர்களாக நடித்துள்ள படங்கள் அடுத்தடுத்து வர உள்ளன. ராம் சரண் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் 'கேம் சேஞ்சர்' படம் இந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜுனியர் என்டிஆர் தனி கதாநாயகனாக நடித்துள்ள 'தேவரா' படத்தின் முதல் பாகம் இந்த வாரம் செப்டம்பர் 27ம் தேதி வெளியாக உள்ளது. இப்படம் அவரது தனி படங்களிலேயே அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ள படமாக சாதனை புரிந்துள்ளது. தெலுங்கு மாநிலங்களான ஆந்திரா, தெலங்கானா தியேட்டர் உரிமை மட்டும் 110 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாகத் தகவல். மற்ற மாநிலங்கள், வெளிநாடுகள் சேர்த்து ஒட்டு மொத்தமாக 180 கோடி வரை வியபாரம் நடைபெற்றுள்ளதாம்.
இப்படம் தென் மாநிலங்களில் மட்டுமல்லாது வட மாநிலங்களிலும் வெற்றி பெற்றால் தெலுங்கு நடிகரான பிரபாஸுக்குப் பிறகு பான் இந்தியா நடிகராக தனி அடையாளத்துடன் உயர்வார் ஜுனியர் என்டிஆர்.