நான் நிஜமாகவே அதிர்ஷ்டசாலி : மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | முதன்முதலில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படம் 'அஞ்சான்': இயக்குனர் லிங்குசாமி | கீர்த்தி சுரேஷ் வைத்த அன்பான கோரிக்கையை நிராகரித்த தனுஷ் | விஜய் ஆண்டனி இசையமைத்து பாடிய பூக்கி படத்தின் முதல் பாடல் வெளியானது! | தனுஷின் தேரே இஷ்க் மெயின் படத்தின் ப்ரீ புக்கிங் எவ்வளவு? | சூர்யா 46வது படம் 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறதா? | பிரதீப் ரங்கநாதனை புகழும் கிர்த்தி ஷெட்டி | டிரைலர் உட்பட ஜனநாயகன் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் | ரவி தேஜா உடன் இணைந்த பிரியா பவானி சங்கர் | 'பிசாசு 2' படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தேனா?: ஆண்ட்ரியா விளக்கம் |

'மஹா சிவராத்திரி' இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இரவு முழுவதும் கண் விழித்து சிவபெருமானை வழிபடுவார்கள். அந்தக் காலத்தில் எல்லாம் டூரிங் டாக்கீஸ்கள் இருந்தபோது ஒரே டிக்கெட்டில் விடிய விடிய மூன்று படங்களைக் காட்டுவார்கள். காலப் போக்கில் அவை போய்விட்டன.
தெலுங்கானா தலைநகரான ஹைதராபாத்தில் இன்று இரவு மகேஷ்பாபு நடித்த 'குண்டூர் காரம்', ஜுனியர் என்டிஆர் நடித்த 'தேவரா' ஆகிய படங்களை இரவு நேரக் காட்சியாக நடத்தத் திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், அந்தக் காட்சிகளுக்கு தெலுங்கானா அரசு அனுமதி அளிக்கவில்லை.
கடந்த வருடம் 'புஷ்பா 2' படத்தின் பிரிமியர் காட்சியின் போது நடைபெற்ற நெரிசலில் பெண் ஒருவர் மரணம் அடைந்தார். அதனால், அங்கு அனைத்துவிதமான சிறப்புக் காட்சிகளுக்கும் நீதிமன்றம் தடை விதித்தது. எனவே தான் இன்றைய சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை எனத் தெரிகிறது.
இன்றைய சிறப்புக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டதால் மகேஷ்பாபு ரசிகர்களும், ஜுனியர் என்டிஆர் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.