விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் | தலைவன் தலைவி, மாரீசன் படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? | மணிகண்டனை இயக்குனர் தியாகராஜன் குமார ராஜா | கருப்பு படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முயற்சி பண்றோம் : ஆர்.ஜே. பாலாஜி | பிரசாந்த் படத்தில் அறிமுகமாகும் பிரபலங்களின் வாரிசுகள் | திருமணம் செய்யாமலேயே கர்ப்பம் ஆன பாவனா |
“என்னை நம்பாமல் கெட்டவர்கள் உண்டே தவிர; நம்பி கெட்டவர்கள் யாரும் இல்லை” (எம்ஜிஆர்) 'மணந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி', (வீரப்பா), 'இது எப்படி இருக்கு' (ரஜினி), 'என்னம்மா கண்ணு சவுக்யமா?' (சத்யராஜ்), 'ஐ லவ் யூ செல்லம்' (பிரகாஷ்ராஜ்), 'தெறிக்க விடலாமா' (அஜித்) 'நான் ஒரு தடவை முடிவு பண்ணிட்டா என் பேச்சை நானே கேட்க மாட்டேன்' (விஜய்) இப்படி பல நடிகர்கள் பேசிய பன்ச் டயலாக்குகள் பின்னாளில் பிரபலமானது. ஆனால் ரசிகர்களிடம் பிரபலமான முதல் பன்ச் டயலாக் டி.எஸ்.பாலய்யா பேசியது.
1946ம் ஆண்டு வெளிவந்த 'வால்மீகி' படத்தில் அவர் வில்லன். மகாபாரத்தை எழுதிய வால்மீகி முனிவரின் கதை. அவர் ஒரு கொள்ளைக்காரனாக இருந்தார், தான் காதலித்த மன்னரின் மகளை கடத்தினார் என்றெல்லாம் கதைகள் உண்டு. அதன் அடிப்படையில் உருவான படம், வால்மீகியாக ஹென்னப்ப பாகவதர் நடித்தார், அவரது காதலியாக யு.ஆர்.ஜீவரத்தினம் நடித்தார். அவரை கடத்தும் வில்லன் வீரசிம்ஹாவாக டி.எஸ்.பாலய்யா நடித்தார். வில்லன் போடும் திட்டங்களை எல்லாம் ஹீரோ ஹென்னப்பா பாகவதர் முறியடித்து விடுவார்.
இதனால் ஏமாற்றம் அடையும் பாலய்யா, அவர் தன்னை பார்த்து தன் முகத்துக்கு நேராக தனது விரலை நீட்டியபடி “வீரசிம்ஹா பதராதே” என்ற வசனம் மிகவும் பிரபலமாகி பட்டிதொட்டியெங்கும் பரவியது. யாருக்காவது தீங்கு நடந்தால் அவர்களை தங்களை பார்த்து 'வீரசிம்ஹா பதராதே' என்று சொல்லிக் கொண்டார்கள். இதே டி.எஸ்.பாலய்யா மதுரை வீரன் படத்தில் பேசிய 'இன்னிக்கு வெள்ளிக்கிழமை வாளை கையால தொடக்கூடாதப்பா' என்று பேசிய வசனமும் பிரபலமானது.