ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
தமிழில், எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்தவர் தெலுங்கு நடிகரான சர்வானந்த். அந்த படத்திற்கு பிறகு தமிழில் இருந்து 50க்கும் மேற்பட்ட கதைகள் சென்றதும் எந்த கதையிலும் நடிக்க விருப்பம் தெரிவிக்காத அவர், தற்போது ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை என்ற படத்தில் மட்டுமே நடிக்க சம்மதித்து நடித்து முடித்து விட்டார். இந்த படம் தமிழில் தனக்கொரு திருப்புமுனையாக அமையும் என்றும் காத்திருக்கிறார் சர்வானந்த்.
இந்தநிலையில், தெலுங்கில் ராம்கோபால்வர்மா இயக்கத்தில் அவர் நடித்த படம் தமிழில், நான்தான்டா என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியாகிறது. இப்படத்தில் இதுவரை சாப்ட்டான வேடங்களில் நடித்து வந்த சர்வானந்த் முதன்முறையாக ஆக்ஷன் வேடத்தில் நடித்துள்ளாராம். ஏற்கனவே சூர்யா நடிப்பில் ரத்த சரித்திரம் என்ற படத்தை தமிழில் இயக்கிய ராம்கோபால்வர்மா இப்படத்தை புதிய கோணத்தில் வடிமைத்துள்ளாராம். அதனால் அந்த படம் பெற்றுத்தராத வெற்றியை இப்படம் பெற்றத்தரும் என்றும் தான் நம்புவதாக தெரிவித்துள்ளார்.