ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் | சூர்யாவுடன் நடிப்பது வாழ்நாள் கனவு: மீனாட்சி தினேஷ் | 'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள் : 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன ? | பிளாஷ்பேக்: ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராஜேஷ் | பிளாஷ்பேக்: 40 வயது மூத்தவருக்கு ஜோடி: இதிலும் சாதனை படைத்த ஸ்ரீதேவி | 25 ஆண்டுகளுக்கு பிறகு மகனுடன் இணைந்து நடிக்கும் ஜெயராம் | நீதிமன்ற உத்தரவுப்படி போலீஸ் விசாரணைக்கு நேரில் ஆஜரான மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர் |
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் சில வாரங்களுக்கு முன்பு ஒரு அறிவிப்பு வெளியானது. விஷால், தனுஷ் ஆகியோரை வைத்து புதிதாகப் படங்களைத் தயாரிக்க உள்ளவர்கள் சங்கத்தை அணுகி ஆலோசனை கேட்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது அவர்கள் மீதான மறைமுகத் தடை விதிக்கும் ஏற்பாடு என்ற சர்ச்சை எழுந்தது.
இதன்பின் விஷால் தரப்பிலிருந்து பதிலுக்கு அறிவிக்கை ஒன்று வெளியானது. ஆனால், தனுஷ் அமைதி காத்து வந்தார். தற்போது தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக உள்ள முரளி ராமசாமி தயாரிப்பில் தனுஷ் நடிக்க ஒரு படம் ஆரம்பமாகி பின் நின்று போனது. அடுத்து செயலாளராக இருக்கும் கதிரேசன் தயாரிக்க உள்ள ஒரு படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்க அட்வான்ஸ் வாங்கி நடித்துக் கொடுக்காமல் இருந்ததால்தான் அவர் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.
இதையடுத்து நடிகர் சங்கத்தின் சார்பில் தயாரிப்பாளர் சங்கத்திடம் பேச்சுவார்த்தை நடந்தது. அதில் எடுக்கப்பட்ட சுமூகமான முடிவுகளை அடுத்து தனுஷ் விவகாரம் முடிவுக்கு வந்தது. அதைத் தொடர்ந்து தனுஷ் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார்.
இதன் காரணமாக தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது. டான் பிக்சர்ஸ் என்ற புதிய படத் தயாரிப்பு நிறுவனம் சார்பாக ஆகாஷ் பாஸ்கரன் என்பவர் இப்படத்தைத் தயாரிக்கிறார்.