Advertisement

சிறப்புச்செய்திகள்

ரூ.70 கோடி பட்ஜெட் படத்தில் ஆர்யா | இறுதிகட்ட கங்குவா பணியில் இணைந்த சூர்யா | விடாமுயற்சி படத்தில் இன்னும் ஒரு பாடல் காட்சி மீதம் | 'எமர்ஜென்சி' விவகாரம் : கங்கனாவிற்கு நீதிமன்றம் நோட்டீஸ் | பிளாஷ்பேக்: முதல் ஆக்ஷன் ஹீரோயின் | ஹிட்லர் கருத்து சொல்ல மாட்டார்: விஜய் ஆண்டனி | புற்று நோயாளிகளுக்கு உதவ இசை நிகழ்ச்சி நடத்தும் பரத்வாஜ் | நேரடி தமிழ் படத்தில் நடிக்க ஆசை : 'தேவரா' விழாவில் ஜூனியர் என்டிஆர், ஜான்வி பேச்சு | நடிகைகள் குறித்து அவதூறு பேசும் காந்தாராஜ், பயில்வான் ரங்கநாதன் மீது நடிவடிக்கை: மாதர் சங்கம் கோரிக்கை | நடன மங்கை, நாயகி, நடுங்க செய்த வில்லி : நடிகை சிஐடி சகுந்தலாவின் வாழ்க்கை பயணம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அவரோட சொந்த முடிவு, குடும்ப நலனெல்லாம் ஒன்னும் கிடையாது : போட்டு உடைத்த ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி

11 செப், 2024 - 10:35 IST
எழுத்தின் அளவு:
His-own-decision,-family-welfare-is-nothing-:-says-Jayam-Ravi-wife-Aarti

நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்தும், விவாகரத்து கேட்டும் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ள நிலையில் இது அவரின் சொந்த முடிவு குடும்ப நலனுக்காக எடுக்கப்பட்டது அல்ல என ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. கடந்த 2009ல் தயாரிப்பாளர் சுஜாதாவின் மகள் ஆர்த்தியை திருமணம் செய்தார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் பிரிந்து வாழ்வதாக செய்தி வந்த நிலையில் இரு தினங்களுக்கு முன் தனது மனைவி ஆர்த்தியை பிரிகிறேன். குடும்ப நலனுக்காக எடுக்கப்பட்ட முடிவு என தெரிவித்தார். மேலும் தனது பிறந்தநாளான நேற்று விவாகரத்து கேட்டு குடும்பநல நீதிமன்றத்தில் ஜெயம் ரவி மனு தாக்கல் செய்து இருந்தார்.

குடும்ப நலனுக்காக எடுக்கப்பட்டது அல்ல
இந்தச்சூழலில் ஆர்த்தி வெளியிட்ட அறிக்கை : ‛‛எங்கள் திருமண வாழ்க்கை குறித்து வெளியான அறிக்கையை பார்த்து கவலையும், மன வேதனையும் அடைந்தேன். இது முழுக்க முழுக்க என் கவனத்திற்கு வராமலும், என் ஒப்புதல் இல்லாமலும் வெளியான ஒன்று. பரஸ்பர நம்பிக்கை, மரியாதையுடன் 18 வருடங்களாக நான் வாழ்ந்த வாழ்க்கை இந்த அறிக்கையின் மூலம் அதற்குரிய கவுரவம், கண்ணியம் மற்றும் தனித்தன்மையை இழந்து விட்டதாக உணர்கிறேன்.



என் கணவரிடம் மனம் விட்டு பேச, என் கணவரை சந்திக்க வேண்டும் என பலவித முயற்சிகள் செய்தேன். அதற்கான வாய்ப்பு எனக்கு மறுக்கப்பட்டது. நானும் என் இரண்டு குழந்தைகளும் எதுவும் புரியாமல் தவிக்கிறோம். திருமண பந்தத்தில் இருந்து விலக வேண்டும் என்ற இந்த முடிவு முழுக்க முழுக்க சொந்த விருப்பத்தைச் சார்ந்து அவராகவே எடுத்த முடிவே தவிர, குடும்ப நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு அல்ல.

பொதுவெளியில் நடக்கும் தாக்குதலால் வேதனை
ஆழ்ந்த மன வேதனையில் இருக்கின்ற நிலையிலும் நான் பொதுவெளியில் இது குறித்து கருத்து தெரிவிப்பதை தவிர்க்கவே இப்போதும் விரும்புகிறேன். ஆனால் என் மீது குற்றம் சாட்டியும், என் நடத்தையின் மீது களங்கம் கற்பிக்கும் வகையிலும் பொதுவெளியில் மறைமுகமாக நடத்தப்படும் தாக்குதல்களை மிகுந்த சிரமத்துடன் எதிர்கொள்ள வேண்டி உள்ளது.

ஒரு தாயாக எனக்கு எப்பொழுதும் என் குழந்தைகளின் நலனும், எதிர்காலமுமே முதல் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என் குழந்தைகளை காயப்படுத்துவதை என்னால் அனுமதிக்க இயலாது. மறுக்கப்படாத பொய்கள் காலப்போக்கில் உண்மையாக நம்பப்படும் என்பதால் இவற்றை மறுப்பதும் என் முதல் கடமையாகிறது.



எங்களுக்கு துணை நில்லுங்க
தற்போது இந்த கடினமான காலகட்டத்தில் என் குழந்தைகளுக்கு தேவைப்படும் தைரியத்தையும், மனோதிடத்தையும் அவர்களுடன் ஒருத்தியாக நின்று அவர்களுக்கு வழங்குவதே என் தலையாய கடமை. காலம் நடந்த உண்மைகளை எந்த பாரபட்சமும் இன்றி உணர்த்தும் என்பதை முழுமையாக நம்புகிறேன். இந்த கடின காலத்தை நானும் என் குழந்தைகளும் கடக்கும் வரை எங்கள் தனிப்பட்ட உணர்வுகளுக்கு மதிப்பளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இத்தனை காலமாக எங்களுக்கு ஆதரவு தரும் பத்திரிக்கை, ஊடக மற்றும் ரசிகர்களுக்கு நன்றி. உங்கள் அன்பும் ஆதரவும் மட்டுமே என்னையும் என் குழந்தைகளையும் இந்த காலகட்டத்தில் தூணாக காத்து நிற்கும். இந்த சோதனையில் இருந்து நாங்கள் மீண்டு வர உங்கள் பிரார்த்தனைகள் துணை நிற்க வேண்டுகிறேன்.

இவ்வாறு ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
'தேவரா' டிரைலர்: பான் இந்தியாக்கு 'செட்' ஆகுமா?'தேவரா' டிரைலர்: பான் இந்தியாக்கு ... நடிகராக விஷாலின் 20 வருடங்கள் நிறைவு நடிகராக விஷாலின் 20 வருடங்கள் நிறைவு

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

Natchimuthu Chithiraisamy - TIRUPUR,இந்தியா
12 செப், 2024 - 04:09 Report Abuse
Natchimuthu Chithiraisamy ஜெயம் ரவிக்கு இன்னும் குழந்தைகள் வேணும் அதுகளும் நடிக்க வேண்டும் என்கிற பேராசை தான். நாகர்ஜோன் முதல் பையன் மாதிரி இந்த இரண்டு பசங்களும் நடிக்க வேண்டும். இனி திருமணம் செய்து பெறுகின்ற குழந்தைகளும் நடிக்க வேண்டும். அத பார்க்க செலவு செய்ய நாட்டு மக்கள் வாழவேண்டும்
Rate this:
12 செப், 2024 - 11:09 Report Abuse
srinivasan தயவு செய்து உங்கள் முடிவை மாற்றிக்கொள்ளுங்கள் திரு.ஜெயம் ரவி அவர்களே உங்கள் ego மனக்கசப்பு போன்றவை குடும்பத்தில் வேண்டாம்.. 1 வருடம் நேரம் கூட எடுத்துக்கொள்ளுங்கள். ஆனால் விவாகரத்து வேண்டாம்..குழந்தைகள் மிகவும் பாதிக்க படுவார்கள் நீங்கள் இருவரும் மிகவும் நல்ல ஜோடி. உங்களுக்காக நான் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன்.
Rate this:
R Hariharan - Hyderabad,இந்தியா
12 செப், 2024 - 09:09 Report Abuse
R Hariharan இவர்களுக்கு இதே வேலைய போச்சு. அவள்கள் பெற்ற குலந்திகள் பற்றி இல்லை. இவர்கள் எல்லாம் திரையில் நல்லவர்கள் போல் நடிக்கிறார்கள். இந்த அமளி முடிந்த பிரகள ஏதோ ஒரு நடிகையை திருமணம் கொள்வார்கள்.
Rate this:
Senthoora - Sydney,ஆஸ்திரேலியா
12 செப், 2024 - 07:09 Report Abuse
Senthoora நடிகர்களும், நடிகைகளும் திருமணம் செய்யும்போது, நடிகர், நடிகைகளே திருமணம் செய்யுங்கள், ஏன்னா அவங்க காலப்போக்கில் காதல் வாழ்வு கசந்து, வேறு கொப்புகளுக்கு தாவுவது தானே அவர்களின் மனசு.
Rate this:
தாமரை மலர்கிறது - தஞ்சை,இந்தியா
11 செப், 2024 - 08:09 Report Abuse
தாமரை மலர்கிறது ஆர்த்தி தான் விவாகரத்து கேட்கறார் என்பது மாறி, ஜெயம் ரவி தான் கேட்டுள்ளார். காரணம் குறுக்கே புகுந்த விஐபி புருஷ்லி தானோ?
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in