'ஜனநாயகன், டாக்சிக்' : அடுத்தடுத்த சர்ச்சையில் தயாரிப்பு நிறுவனம் | அவதூறு பரப்பும் விஜய் ரசிகர்கள்! - சாடிய இயக்குனர் சுதா கொங்கரா | அல்லு அர்ஜூனின் 23வது படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ்; அறிவிப்பு வெளியானது | பராசக்தி என் நடிப்புக்கான முழுமையான அங்கீகாரத்தை கொடுத்து விட்டது! -ஸ்ரீ லீலா வெளியிட்ட தகவல் | தனுஷ் 54வது படத்தின் புதிய அப்டேட்: நாளை பொங்கல் தினத்தில் வெளியாகிறது! | பொங்கல் பண்டிகையை தித்திப்பாக்கும்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | மீண்டும் இணைந்த 'தகராறு' கூட்டணி! | சம்மர் 2026ல் ரிலீஸ்: உறுதிப்படுத்திய அருள்நிதி, மம்தா மோகன்தாஸ் படம்! | 2 நாட்களில் ரூ.120 கோடி வசூலைக் கடந்த 'மன ஷங்கர வர பிரசாத் காரு' படம் | தமிழில் பேச முயற்சிக்கும் ஸ்ரீலீலா |

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. 2009ல் தயாரிப்பாளர் சுஜாதாவின் மகள் ஆர்த்தியை திருமணம் செய்தார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். 15 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த இவர்கள் இப்போது பிரிந்து விட்டனர். இதுதொடர்பாக நேற்று(செப்., 9) ஜெயம் ரவி வெளியிட்ட அறிக்கையில், ‛‛நீண்டகால யோசனை, பல பரிசீலனைக்கு பின் ஆர்த்தியை பிரியலாம் என்ற கடினமான முடிவை எடுத்துள்ளேன். இது எளிதாக எடுக்கப்பட்டதல்ல, என்னை சாந்தவர்களின் நலனை கருதி எடுக்கப்பட்டது. இது எனது சொந்த முடிவு என்பதால் எனது தனிப்பட்ட விஷயமாகவே இருக்க வேண்டும் என வேண்டுகிறேன். அனைவரின் ஆதரவுக்கு நன்றி'' என தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் இன்று(செப்., 10) விவாகரத்து கோரி சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் ஜெயம் ரவி மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கடந்த 2009ல் ஆர்த்தியை திருமணம் செய்ததை ரத்து செய்யக் கோரியும், விவாகரத்து கோரியும் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கானது அக்., 10ல் விசாரணைக்கு வருகிறது.
நடிகர் ஜெயம் ரவி இன்று(செப்., 10) தனது 44வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிறந்தநாளில் இப்படியொரு கடினமான முடிவை எடுத்த ஜெயம் ரவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததை விட தைரியமாக இருங்கள் என ரசிகர்கள் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.