22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை | அஜித்தை சந்தித்த நடிகர் சதீஷ் |
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. 2009ல் தயாரிப்பாளர் சுஜாதாவின் மகள் ஆர்த்தியை திருமணம் செய்தார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். 15 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த இவர்கள் இப்போது பிரிந்து விட்டனர். இதுதொடர்பாக நேற்று(செப்., 9) ஜெயம் ரவி வெளியிட்ட அறிக்கையில், ‛‛நீண்டகால யோசனை, பல பரிசீலனைக்கு பின் ஆர்த்தியை பிரியலாம் என்ற கடினமான முடிவை எடுத்துள்ளேன். இது எளிதாக எடுக்கப்பட்டதல்ல, என்னை சாந்தவர்களின் நலனை கருதி எடுக்கப்பட்டது. இது எனது சொந்த முடிவு என்பதால் எனது தனிப்பட்ட விஷயமாகவே இருக்க வேண்டும் என வேண்டுகிறேன். அனைவரின் ஆதரவுக்கு நன்றி'' என தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் இன்று(செப்., 10) விவாகரத்து கோரி சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் ஜெயம் ரவி மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கடந்த 2009ல் ஆர்த்தியை திருமணம் செய்ததை ரத்து செய்யக் கோரியும், விவாகரத்து கோரியும் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கானது அக்., 10ல் விசாரணைக்கு வருகிறது.
நடிகர் ஜெயம் ரவி இன்று(செப்., 10) தனது 44வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிறந்தநாளில் இப்படியொரு கடினமான முடிவை எடுத்த ஜெயம் ரவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததை விட தைரியமாக இருங்கள் என ரசிகர்கள் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.