Advertisement

சிறப்புச்செய்திகள்

இந்த கண்டிஷன் ஓகே என்றால் சினிமாவில் நடிப்பேன் - ஜோவிதா பளீச் பேட்டி | வாழ்க்கையிலேயே செய்த பெரிய தவறு பிக்பாஸ் - சக்தி | நவ., 14ல் வர்றோம்... : வந்தாச்சு சூர்யாவின் ‛கங்குவா' புதிய ரிலீஸ் அறிவிப்பு | பதம் பார்த்தது பாலியல் புகார் : ‛ரஞ்சிதமே' பாடல் புகழ் நடன இயக்குனர் ஜானி கைது | கன்னட சினிமாவிலும் பாலியல் தொல்லை : மகளிர் ஆணையத்தில் சஞ்சனா கல்ராணி புகார் | பிளாஷ்பேக்: பிரவீனாவின் நிறைவேறாத கனவு | பிளாஷ்பேக்: அண்ணன், தங்கை ஜோடியாக நடித்த படம் | இசை கலைஞர்கள் சினிமாவை மட்டும் நம்பகூடாது : ஏ.ஆர்.ரெஹானா சொல்கிறார் | கூலி படத்தின் சண்டைக்காட்சி லீக் : லோகேஷ் கனகராஜின் வருத்தமான பதிவு | பெப்சி வரம்பு மீறுகிறது: நடிகர் சங்கம் எச்சரிக்கை |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிளாஷ்பேக் : பாடகி எஸ் ஜானகியை அழவைத்த இளையராஜாவின் பாடல்

10 செப், 2024 - 02:54 IST
எழுத்தின் அளவு:
Flashback-:-Ilayarajas-song-that-made-singer-S-Janaki-cry

இளையராஜா என்ற இசை ஆளுமை வளர்ந்து வந்து கொண்டிருந்த 70களின் பிற்பகுதியில் கதாசிரியர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருமான காரைக்குடி நாராயணன், தான் அடுத்து எடுக்கப் போகும் “அச்சாணி” என்ற திரைப்படத்திற்கு இசையமைக்க, சாந்தோமில் ஒரு சிறு வீட்டில் தனது சகோதரர்களான பாஸ்கர் மற்றும் கங்கை அமரனுடன் வசித்து வந்த இளையராஜாவை அணுகினார். தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள அவர் முற்பட, அதற்கு முன்பே இளையராஜா உங்களை எனக்கு நன்றாக தெரியும். நீங்கள் பணிபுரிந்த “தேன் சிந்துதே வானம்” திரைப்படத்தில், வி குமாரின் இசையமைப்பில் வந்த “உன்னிடம் மயங்குகிறேன்” என்ற பாடலுக்கு நான் கிட்டார் வாசித்திருக்கின்றேன். எனவே உங்களைப் பற்றிய அறிமுகம் எனக்குத் தேவையில்லை என கூற, அதன்பின் தான் தயாரித்து, முதன் முதலாக இயக்கப் போகும் திரைப்படமான “அச்சாணி” என்ற திரைப்படத்திற்கு இசையமைப்பாளராக இளையராஜாவை ஒப்பந்தம் செய்தார் காரைக்குடி நாராயணன்.

கோடிகளில் புரண்டு கொண்டிருக்கும் இன்றைய திரையிசை உலகத்தை ஒப்பிடும்போது, அன்று இளையராஜா “அச்சாணி” திரைப்படத்தின் இசையமைப்பிற்கு சில லட்சங்களையாவது வாங்கியிருப்பார் என எண்ணத் தோன்றும். ஆனால் இளையராஜா வாங்கிய தொகை வெறும் 8000 மட்டுமே. ஸ்டீரியோ ரெக்கார்டிங்கில் பாடலை பதிவு செய்ய முடிவெடுத்து, அதற்காக அருணாச்சலா ஸ்டூடியோவும் ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால் அங்கு ஸ்டீரியோ முறையில் பாடல் பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட, பின் பிரசாத் ஸடூடியோவில் ஒரே ஒரு மணிநேரம் மட்டும் நேரம் ஒதுக்கித் தருமாறு கேட்டு, அந்த ஒரு மணிநேரத்தில் இரண்டு பாடல்களை பதிவு செய்ய வேண்டிய நெருக்கடியான நிலையில் இருந்தார் இசைஞானி இளையராஜா.

எஸ்பி பாலசுப்ரமணியம், பி சுசீலாவின் குரல்களில் “தாலாட்டு பிள்ளையுண்டு தாலாட்டு” என்ற பாடலை அவர்களை பாட வைத்து பதிவு செய்து அனுப்பிவிட்டார். அடுத்து எஸ் ஜானகியின் குரலில் பதிவு செய்ய வேண்டிய பாடல் பதிவின் போது பல்வேறு இடையூறுகள் தலைதூக்க, இசைக்குழுவினரைப் பார்த்து இளையராஜா கோபம் கொண்டார். அப்போது இசைக்குழுவினர் எஸ் ஜானகி அழுது கொண்டிருப்பதை இளையராஜாவிடம் தெரிவிக்க, ஜானகியிடம் சென்று இளையராஜா விபரம் கேட்டார். பாடிக்கொண்டிருக்கும் போது வந்த அழுகையை அடக்க முடியாத ஜானகி, அவரிடம் கொஞ்சம் அவகாசம் கேட்க, பின் ஜானகியை ஆசுவாசப்படுத்தி அவரையே பாட வைத்து இளையராஜா பதிவு செய்த பாடல்தான் “அச்சாணி” திரைப்படத்தில் வரும் “மாதா உன் கோவிலில் மணி தீபம் ஏற்றினேன்” என்ற பாடல்.

1978ம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படத்தின் பாடல், இன்றும் கேட்போரின் மனங்களை கலங்க வைக்கும் பாடலாகவும், உறங்க வைக்கும் பாடலாகவும் இருந்து வருகிறது. ஒரு பின்னணிப் பாடகரையே நிலை குலையச் செய்யும் வகையில் ஒரு பாடல் உருவாகிறது என்றால், அந்தப் பாடல் என்ன ஒரு ஜீவனுள்ள பாடலாக இருந்திருக்க முடியும் என்பதற்கு சரியான உதாரணம்தான் 'இசைஞானி' இளையராஜாவின் இசையில் வந்த “மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன்” என்ற இந்தப் பாடல்.

1978ல் வெளிவந்த இந்தப் பாடலைப் பற்றி 2024ல் நாம் பேசுகின்றோம் என்றால், அன்றைய சக திரைக்கலைஞர்கள் ஒருவர் மீது ஒருவர் வைத்திருந்த நம்பிக்கை, மரியாதை, தொழிலின் மீது அவர்கள் காட்டிய அற்பணிப்பு என இவையெல்லாம் சேர்ந்து உருவானவைதான் இன்று நாம் கேட்டு, இன்புற்று மகிழும் இதுபோன்ற காலத்தை விஞ்சி நிற்கும் காவியப் பாடல்கள்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
அந்நியன் 2ம் பாகத்தை எதிர்பார்த்த விக்ரம்அந்நியன் 2ம் பாகத்தை எதிர்பார்த்த ... பிறந்தநாளில் விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்த ஜெயம் ரவி பிறந்தநாளில் விவாகரத்து கேட்டு மனு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

இளந்திரையன் வேலந்தாவளம் 1978ல் 10gm தங்கத்தின் விலை rs.685....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in