இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
சமீபத்தில் கேரளாவில் வெளியான நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை மலையாள திரையுலகையே உலுக்கியுள்ளது. இந்த அறிக்கை வெளியான தைரியத்தில் பல நடிகைகள் பல வருடங்களுக்கு முன்பு தங்களுக்கு ஏற்பட்ட கசப்பான பாலியல் ரீதியான தொந்தரவுகள் குறித்து வெளிப்படையாக கூறி பிரபல நடிகர்கள், இயக்குனர்கள் மீது குற்றச்சாட்டுகளை வெளிப்படுத்தி வருகின்றனர். சில நடிகர்கள் மீது காவல்துறையில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மலையாள திரையுலகின் பிரபல குணசத்திர நடிகரான அலான்சியர் லே லோபஸ் என்பவர் மீது இளம் நடிகை ஒருவர் காவல்துறையில் பாலியல் புகார் அளித்துள்ளார். இதை தொடர்ந்து அலான்சியர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
மகேஷிண்டே பிரதிகாரம் படம் மூலமாக பிரபலமானவர்களில் நடிகர் அலான்சியர் லேவும் ஒருவர். அதனை தொடர்ந்து பிசியான குணச்சித்திர நடிகராக மாறிய இவர் மீது கடந்த 2019ல் இளம் நடிகை ஒருவர், இவருடன் இணைந்து நடித்தபோது படப்பிடிப்பு சமயத்தில் தனக்கு தொடர்ந்து பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்தார் என அப்போது பிரபலமாக இருந்த மீ டூ பிரசாரம் மூலம் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ஆரம்பத்தில் அதை நடிகர் அலான்சியர் லே மறுத்தாலும் பின்னர் ஒரு பிரபல நாளிதழ் மூலமாக சம்பந்தப்பட்ட நடிகையிடம் பகிரங்கமாகவே மன்னிப்பு கேட்டார். அத்துடன் அந்த பிரச்னை முடிவுக்கு வந்தது. ஆனால் தற்போது ஹேமா கமிஷன் அறிக்கை வெளியானதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட அந்த நடிகை, அலான்சியர் லே மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து புகாரில் அந்த நடிகை கூறும்போது, “கடந்த 2017ல் அலான்சியர் லேவுடன் நடித்தபோது படப்பிடிப்பில் எனக்கு அவர் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்தார். அது தொடர்பாக அப்போது மலையாள நடிகர் சங்கத்தில் பொறுப்பில் இருந்த பொதுச்செயலாளர் இடவேள பாபுவிடம் உடனடியாக இது குறித்து புகார் அளித்தேன். ஆனால் அப்போது அதை அவர்கள் பெரிதாக்க விரும்பாமல் சம்பந்தப்பட்ட நடிகர் உங்களிடம் பொதுவெளியில் மன்னிப்பு கேட்பார். இத்துடன் பிரச்னையை முடித்துக் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தப்பட்டேன். அப்படி அவர் மன்னிப்பு கேட்டாலும் என் மனதில் அவர் என்னிடம் நடந்து கொண்ட விதம் மிகப்பெரிய காயத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனால் தற்போது அவர் மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளேன்” என்று கூறியுள்ளார்.