பிளாஷ்பேக் : சோக ராகங்கள் கூட சுக ராகங்களாக மாறும் எம்ஜிஆரின் பாடல்கள் | செப். 20ல் வேட்டையன் பட இசை வெளியீட்டு விழா | கார்த்தி 29வது படத்தை இயக்கும் டாணாக்காரன் பட இயக்குனர் | மீண்டும் இணைந்த செல்வராகவன் - ஜி.வி. பிரகாஷ் கூட்டணி! | மூக்குத்தி அம்மன் 2வை இயக்கும் சுந்தர் சி | ஜானி மாஸ்டரை கட்சியிலிருந்து நீக்கிய ஜனசேனா கட்சி | 'குட் பேட் அக்லி' படத்தில் விஜய்யின் வசனத்தை பேசி நடிக்கும் அஜித்! | அசோக்செல்வன் எப்படிப்பட்டவர்? உடைத்து பேசிய கீர்த்தி பாண்டியன்! | பாலிவுட்டில் வில்லனாக என்ட்ரி கொடுக்கும் சூர்யா? | 7 மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியாகும் லால் சலாம்! |
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த படத்தில் விஜய்யுடன் நீண்ட நாளைக்கு பிறகு யுவன் சங்கர் ராஜா கூட்டணி சேர்ந்துள்ளார். மேலும் நடிகர்கள் பிரபுதேவா, பிரசாந்த், மோகன் என பல நட்சத்திரங்கள் இதில் இணைந்து நடித்துள்ளனர். அது மட்டுமல்ல நடிகர் விஜயகாந்த்தும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் ஒருசில காட்சிகளில் வந்து செல்கிறார் என்பதும் சமீபத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே அஜித்தை வைத்து மங்காத்தா என்கிற படத்தை இயக்கிய வெங்கட் பிரபு, அந்த சமயத்தில் விஜய், அஜித் இருவரையும் சந்திக்க வைத்து அவர்களது நட்பை இருதரப்பு ரசிகர்களுக்கும் பறைசாற்றியவர். அதனால் இந்த படம் விஜய் நடிக்கும் கடைசி படத்திற்கு முந்திய படம் என்பதால் நட்புரீதியாக அஜித்தை இந்த படத்தில் ஏதோ ஒரு விதத்தில் பங்களிக்க செய்திருப்பார் என்றும் சொல்லப்பட்டு வந்தது.
இந்த நிலையில் வெங்கட் பிரபுவின் ஆஸ்தான நடிகர்களில் ஒருவரான வைபவும் இந்த படத்தில் நடித்துள்ளார். அவர் தற்போது கோட் படம் பற்றி கூறும்போது இந்த படத்தின் இரண்டாம் பாதியில் ஒரு முக்கியமான காட்சியில் அஜித்தின் பிரபல வசனம் ஒன்றை விஜய் பேசி நடித்துள்ளார். அந்த வசனமும் காட்சியும் வரும்போது அரங்கமே அதிர போகிறது என்று ஒரு சஸ்பென்சை உடைத்துள்ளார்.