சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் | முன்கூட்டியே ரிலீசாகும் மோகன்லாலின் தொடரும் படம் | எம்புரான் டைட்டில் : நன்றி கார்டில் சுரேஷ்கோபி பெயர் நீக்கம் | வீர தீர சூரன் வெற்றி : வின்டேஜ் புகைப்படம் பகிர்ந்த துருவ் விக்ரம் | பெண் விரிவுரையாளருக்கு 2.68 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மோகன்லால் பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு |
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த படத்தில் விஜய்யுடன் நீண்ட நாளைக்கு பிறகு யுவன் சங்கர் ராஜா கூட்டணி சேர்ந்துள்ளார். மேலும் நடிகர்கள் பிரபுதேவா, பிரசாந்த், மோகன் என பல நட்சத்திரங்கள் இதில் இணைந்து நடித்துள்ளனர். அது மட்டுமல்ல நடிகர் விஜயகாந்த்தும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் ஒருசில காட்சிகளில் வந்து செல்கிறார் என்பதும் சமீபத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே அஜித்தை வைத்து மங்காத்தா என்கிற படத்தை இயக்கிய வெங்கட் பிரபு, அந்த சமயத்தில் விஜய், அஜித் இருவரையும் சந்திக்க வைத்து அவர்களது நட்பை இருதரப்பு ரசிகர்களுக்கும் பறைசாற்றியவர். அதனால் இந்த படம் விஜய் நடிக்கும் கடைசி படத்திற்கு முந்திய படம் என்பதால் நட்புரீதியாக அஜித்தை இந்த படத்தில் ஏதோ ஒரு விதத்தில் பங்களிக்க செய்திருப்பார் என்றும் சொல்லப்பட்டு வந்தது.
இந்த நிலையில் வெங்கட் பிரபுவின் ஆஸ்தான நடிகர்களில் ஒருவரான வைபவும் இந்த படத்தில் நடித்துள்ளார். அவர் தற்போது கோட் படம் பற்றி கூறும்போது இந்த படத்தின் இரண்டாம் பாதியில் ஒரு முக்கியமான காட்சியில் அஜித்தின் பிரபல வசனம் ஒன்றை விஜய் பேசி நடித்துள்ளார். அந்த வசனமும் காட்சியும் வரும்போது அரங்கமே அதிர போகிறது என்று ஒரு சஸ்பென்சை உடைத்துள்ளார்.