பிளாஷ்பேக் : சோக ராகங்கள் கூட சுக ராகங்களாக மாறும் எம்ஜிஆரின் பாடல்கள் | செப். 20ல் வேட்டையன் பட இசை வெளியீட்டு விழா | கார்த்தி 29வது படத்தை இயக்கும் டாணாக்காரன் பட இயக்குனர் | மீண்டும் இணைந்த செல்வராகவன் - ஜி.வி. பிரகாஷ் கூட்டணி! | மூக்குத்தி அம்மன் 2வை இயக்கும் சுந்தர் சி | ஜானி மாஸ்டரை கட்சியிலிருந்து நீக்கிய ஜனசேனா கட்சி | 'குட் பேட் அக்லி' படத்தில் விஜய்யின் வசனத்தை பேசி நடிக்கும் அஜித்! | அசோக்செல்வன் எப்படிப்பட்டவர்? உடைத்து பேசிய கீர்த்தி பாண்டியன்! | பாலிவுட்டில் வில்லனாக என்ட்ரி கொடுக்கும் சூர்யா? | 7 மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியாகும் லால் சலாம்! |
மலையாள திரை உலகில் நடிப்பதற்காக வாய்ப்பு தேடும் பெண்கள் பாலியல் ரீதியாக பல்வேறு துன்பங்களுக்கு ஆளாவதாக சமீபத்தில் அது குறித்து வெளியான நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை வெளியிட்டு அதிர்ச்சியை கொடுத்தது. இந்த அறிக்கை வெளியான பிறகு பல நடிகைகள் தாங்கள் சந்தித்த பாலியல் தொந்தரவுகள் குறித்தும் அதில் ஈடுபட்ட சில நடிகர்கள், இயக்குனர்கள் குறித்தும் வெளிப்படையாகவே குற்றம் சாட்டி புகார் அளித்துள்ளனர். அந்த வகையில் நடிகர்கள் சித்திக், முகேஷ் ஜெயசூர்யா ஆகியவர் தான் இது போன்ற பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி மீடியாக்களில் பெரிய அளவில் அடிபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த ஹேமா கமிஷன் அறிக்கை குறித்து மலையாள திரையுலகின் சீனியர் நடிகையான ஷீலா கூறும்போது, “பெண்கள் படங்களில் நடிக்கும் போது அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், போராட்டங்கள் குறித்து எனக்கு நன்றாகவே தெரியும். நான் அதுபோன்ற பிரச்சனைகளை சந்திக்கவில்லை என்றாலும் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த சமயத்தில் அவையெல்லாம் குறித்து பேசுவதற்கான வாய்ப்போ, அதற்கான சரியான சூழலோ யாருக்கும் அமையவில்லை. அதேசமயம் ஏன் சில நடிகர்களின் பெயர்கள் மட்டும் இந்த பிரச்சனையில் தொடர்ந்து குறிப்பிடப்படுகிறது என்பதை தான் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. தவறு யார் செய்திருந்தாலும் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.