மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. | குபேரா படத்தின் இசை வெளியீட்டு விழா அப்டேட்! | போதைப்பொருள் பயன்படுத்த தனி ரூம் வசதி ; பெண் தயாரிப்பாளர் பகீர் குற்றச்சாட்டு | வார்-2வில் விஜய்யின் ஸ்டைலை காப்பி அடித்த ஹிருத்திக் ரோஷன் | தள்ளிப்போகும் 'தொடரும்' பட ஓடிடி ரிலீஸ் |
மலையாள திரை உலகில் நடிப்பதற்காக வாய்ப்பு தேடும் பெண்கள் பாலியல் ரீதியாக பல்வேறு துன்பங்களுக்கு ஆளாவதாக சமீபத்தில் அது குறித்து வெளியான நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை வெளியிட்டு அதிர்ச்சியை கொடுத்தது. இந்த அறிக்கை வெளியான பிறகு பல நடிகைகள் தாங்கள் சந்தித்த பாலியல் தொந்தரவுகள் குறித்தும் அதில் ஈடுபட்ட சில நடிகர்கள், இயக்குனர்கள் குறித்தும் வெளிப்படையாகவே குற்றம் சாட்டி புகார் அளித்துள்ளனர். அந்த வகையில் நடிகர்கள் சித்திக், முகேஷ் ஜெயசூர்யா ஆகியவர் தான் இது போன்ற பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி மீடியாக்களில் பெரிய அளவில் அடிபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த ஹேமா கமிஷன் அறிக்கை குறித்து மலையாள திரையுலகின் சீனியர் நடிகையான ஷீலா கூறும்போது, “பெண்கள் படங்களில் நடிக்கும் போது அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், போராட்டங்கள் குறித்து எனக்கு நன்றாகவே தெரியும். நான் அதுபோன்ற பிரச்சனைகளை சந்திக்கவில்லை என்றாலும் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த சமயத்தில் அவையெல்லாம் குறித்து பேசுவதற்கான வாய்ப்போ, அதற்கான சரியான சூழலோ யாருக்கும் அமையவில்லை. அதேசமயம் ஏன் சில நடிகர்களின் பெயர்கள் மட்டும் இந்த பிரச்சனையில் தொடர்ந்து குறிப்பிடப்படுகிறது என்பதை தான் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. தவறு யார் செய்திருந்தாலும் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.