தெலுங்கில் அறிமுகமாகும் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா! | ஓவியாவை அசிங்கமாக விமர்சிக்கும் விஜய் ரசிகர்கள் | ஜெயிலர் -2வில் நடிக்க அழைப்பு வருமா? தமன்னா எதிர்பார்ப்பு | தெலுங்கு புரமோஷனில் கன்னடத்தில் பேசி விமர்சனங்களில் சிக்கிய ரிஷப் ஷெட்டி! | 250 கோடி வசூலைக் கடந்த பவன் கல்யாணின் 'ஓஜி' | அக்டோபர் 9ம் தேதி ஓடிடியில் வெளியாகும் வார்-2! | ப்ரீ புக்கிங் - தனுஷின் இட்லி கடை எத்தனை கோடி வசூலித்துள்ளது? | அல்லு அர்ஜுனை ஆட்டுவித்த ஜப்பான் நடன இயக்குனர் | சினிமாவுக்கு மகன் வருவாரா அஜித் சொன்ன பதில் | 2வது படத்திலேயே அம்மாவாக நடிப்பது தவறா? தர்ஷனா கேள்வி |
ஆர்ஆர்ஆர் படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து இரண்டு வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகியுள்ள படம் தேவரா. கே.ஜி.எப், சலார் புகழ் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் இந்த படம் உருவாகியுள்ளதால் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதுமட்டுமல்ல நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்திருப்பதன் மூலம் தெலுங்கு திரையுலகில் அடி எடுத்து வைத்துள்ளார். இந்தப் படம் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது.
இந்த நிலையில் இன்று (செப்-2) தனது தாயின் பிறந்தநாளை முன்னிட்டு கர்நாடகாவில் உள்ள அவரது சொந்த ஊரான குந்தபுராவிற்கு நேரில் சென்று தனது தாயின் நீண்டநாள் ஆசையை நிறைவேற்றியுள்ளார் ஜூனியர் என்டிஆர். அப்படியே கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கும் சென்று தரிசனம் செய்து வந்துள்ளார். இந்த தரிசனத்தின் போது அவருடன் நடிகர் ரிஷப் ஷெட்டி, இயக்குநர் பிரசாந்த் நீல் ஆகியோரும் உடன் சென்றிருந்தனர். தரிசனம் முடித்து வந்த ஜூனியர் என்டிஆர் ரிஷப் ஷெட்டி, பிரசாந்த் நீல் மற்றும் கேஜிஎப் பட தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.