ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
மலையாள சினிமாவில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நடிகர்களுக்கு எதிராக ஹேமா கமிஷன் விசாரண நடத்தி வருவதை அடுத்து பல சீனியர் நடிகைகளும் இதுகுறித்து பேச தொடங்கி இருக்கிறார்கள். என்றாலும் ரஜினி, கமல், விஜய் போன்ற முன்னணி நடிகர்கள் இது குறித்து கருத்து சொல்ல மறுத்து வருகிறார்கள்.
இந்நிலையில், பார்த்திபனின் இரவின் நிழல் படத்தில் நடித்த ரேகா நாயர் இது குறித்து ஒரு அதிரடி தகவல் வெளியிட்டுள்ளார். அவர் கூறும் போது, மலையாள சினிமா மட்டுமின்றி அனைத்து மொழி சினிமாக்களிலும் பாலியல் அத்துமீறல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது குறித்து துணிச்சலாக பேசும் நடிகைகளுக்கு முக்கிய நடிகர்கள் மிரட்டல் விடுகிறார்கள். அதன் காரணமாக பலரும் இதை வெளியில் சொல்லாமல் அமைதி காத்து வருகிறார்கள். மலையாள சினிமாவில் இந்த பாலியல் விவகாரத்தில் 10, 20 விக்கெட்டுகள்தான் விழும். ஆனால் தமிழில் பட்டியல் போட்டால் 500, 600 விக்கெட்டுகள் விழும்.
இங்கு நடிகைகள் புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கும் நிலையில் சினிமா சங்கங்கள் இல்லை. விஷால் செருப்பால் அடிக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். ஆனால் அவர் சொல்வதற்கு முன்பே நான் அடித்து விட்டேன். ஆனால் அடித்தவர்களை நீங்கள் எப்படி சித்தரித்தீர்கள். அடி வாங்குனவர்களை நீங்கள் எங்கே போய் வைத்துள்ளீர்கள். அவர்களுடைய பதவியை பறித்தீர்களா? என்று சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ள ரேகா நாயர், 2014ம் ஆண்டு ஒரு ரியாலிட்டி ஷோவுக்கு வந்த பல பெண்களையும் மேனேஜர்கள் அழைத்து சென்றார்கள். அதை அப்போதே நான் ஓப்பனாக கூறினேன். அது நடந்து பத்து வருஷம் ஆகிவிட்டது. ஆனால் அப்படி வெளிப்படையாக சொன்ன பிறகும் அப்போது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.