ரசிகர் மன்றம் எதற்கு... ஊரார் பிள்ளையை கெடுக்க விரும்பவில்லை : அரவிந்த்சாமி பளீச் | ரீல் அல்ல ரியல் : விபத்து ஏற்படுத்திய லாரியை சேஸிங் செய்து மடக்கிய நவ்யா நாயர் | விஜய் தவறான ரூட்டில் செல்கிறார் - மோகன்.ஜி வருத்தம் | ரூ.70 கோடி பட்ஜெட் படத்தில் ஆர்யா | இறுதிகட்ட கங்குவா பணியில் இணைந்த சூர்யா | விடாமுயற்சி படத்தில் இன்னும் ஒரு பாடல் காட்சி மீதம் | 'எமர்ஜென்சி' விவகாரம் : கங்கனாவிற்கு நீதிமன்றம் நோட்டீஸ் | பிளாஷ்பேக்: முதல் ஆக்ஷன் ஹீரோயின் | ஹிட்லர் கருத்து சொல்ல மாட்டார்: விஜய் ஆண்டனி | புற்று நோயாளிகளுக்கு உதவ இசை நிகழ்ச்சி நடத்தும் பரத்வாஜ் |
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் கோட். செப்டம்பர் ஐந்தாம் தேதி திரைக்கு வரும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். வெங்கட் பிரபு அளித்த ஒரு பேட்டியில் கோட் படத்தின் கதை குறித்து கூறும் போது, இந்த படத்தின் கதையை டிரைலரிலேயே சொல்லி விட்டேன். என்றாலும் அதை யாரும் கண்டுபிடிக்கவில்லை. அதோடு இந்த படத்தின் காட்சிகள் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை யூகிக்க முடியாத அளவுக்கு இருக்கும். அப்படிப்பட்ட ஒரு திரைக் கதையை உருவாக்கி இருக்கிறேன். அஜித் நடிப்பில் நான் இயக்கிய மங்காத்தா துரோகத்தை வெளிப்படுத்தும் கதையில் உருவாகியிருந்தது. ஆனால் இந்த கோட் படத்தை காந்தி என்ற நபரின் வாழ்க்கையில் நடந்த ஒரு குடும்ப கதையில் உருவாக்கி இருக்கிறேன். மங்காத்தா படத்தை விட இந்த கோட் படம் சிறப்பானதாக இருக்கும் என்று தெரிவித்திருக்கிறார் வெங்கட் பிரபு.