‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் | வித்யா பாலனுக்கு நன்றி சொன்ன மலையாள காமெடி நடிகர் | திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்தேன் ; பாலிவுட் நடிகை நேஹா துபியா ஓபன் டாக் | காலில் செருப்பு அணியாமல் என்னை பக்குவப்படுத்திக் கொள்கிறேன் : விஜய் ஆண்டனி | பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பாக்., நடிகை; 9 மாதங்களுக்கு பிறகே கண்டுபிடித்த போலீசார் | மேலாளரை உன்னி முகுந்தன் தாக்கவில்லை ; நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போலீசார் | ரஜினி ஒரு புத்திசாலி, கத்தியைப் போல கூர்மையானவர் : ஸ்ருதிஹாசன் | அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் வில்லனாகும் ஹாலிவுட் நடிகர் |
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கும், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கும் இடையில் தற்போது மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் தனுஷ் மற்றும் 5 நடிகர்கள், தயாரிப்பாளர்களிடம் முன் பணம் பெற்றுக் கொண்டு நடிக்காமல் இருக்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இருக்கிறோம் என்றும் பல்வேறு பிரச்சினைகளுக்காக முழு வேலை நிறுத்தம் செய்ய இருக்கிறோம் என்று தயாரிப்பாளர் சங்கம் அறிவித்தது. எங்களை கேட்காமல் இப்படி ஒரு முடிவை எடுத்து தவறு என்ற நடிகர் சங்கம் பதிளித்தது.
இந்த நிலையில் இதுகுறித்து ஆலோசிக்க நேற்று நடிகர் சங்க ஆலோசனை கூட்டம் சங்க தலைவர் நாசர் தலைமையில் நடந்தது. பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர்கள் பூச்சி முருகன், கருணாஸ் மற்றும் விஜய்சேதுபதி, ஆர்யா, பிரசாந்த், விஜய் ஆண்டனி, தியாகராஜன், சிபிராஜ், கவுதம் கார்த்திக், ராஜ் கிரண், யோகிபாபு, நடிகைகள் லதா, ரோகிணி, கோவை சரளா, குட்டி பத்மினி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ள சினிமா ஸ்டிரைக், நடிகர் நடிகைகள் சம்பள குறைப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆனாலும் எந்த ஒரு உறுதியான முடிவும் எடுக்காமல் கலைந்தது. விரைவில் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தனர்.