தெலுங்குத் திரையுலகினர் மீது பவன் கல்யாண் கோபம் | கலாம் கதையை படமாக்குவது சவால்: இயக்குனர் ஓம் ராவத் | அரசியல் சீன், டயலாக் உருவாக்கி கொடுத்த நடிகர் | ரோஜாஸ்ரீயின் அழகு ரகசியம் | ‛‛கமல் ஒரு ஏணி; அவரை மதித்து மேலே செல்வேன், மிதித்து அல்ல'': சிம்பு | 'கேம் சேஞ்ஜர்' அனுபவம் ஒரு 'பயங்கரம்' - விலகிய எடிட்டர் பேச்சு | பிளாஷ்பேக்: மலைக்க வைக்கும் 50வது ஆண்டில் “மயங்குகிறாள் ஒரு மாது” | ஜூன் மாதத்தில் ‛சர்தார் 2' படப்பிடிப்பு முடியும் ; மாளவிகா மோகனன் | காதலிக்க நேரமில்லை, தில், ராட்சசன் - ஞாயிறு திரைப்படங்கள் | நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி |
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கும், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கும் இடையில் தற்போது மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் தனுஷ் மற்றும் 5 நடிகர்கள், தயாரிப்பாளர்களிடம் முன் பணம் பெற்றுக் கொண்டு நடிக்காமல் இருக்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இருக்கிறோம் என்றும் பல்வேறு பிரச்சினைகளுக்காக முழு வேலை நிறுத்தம் செய்ய இருக்கிறோம் என்று தயாரிப்பாளர் சங்கம் அறிவித்தது. எங்களை கேட்காமல் இப்படி ஒரு முடிவை எடுத்து தவறு என்ற நடிகர் சங்கம் பதிளித்தது.
இந்த நிலையில் இதுகுறித்து ஆலோசிக்க நேற்று நடிகர் சங்க ஆலோசனை கூட்டம் சங்க தலைவர் நாசர் தலைமையில் நடந்தது. பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர்கள் பூச்சி முருகன், கருணாஸ் மற்றும் விஜய்சேதுபதி, ஆர்யா, பிரசாந்த், விஜய் ஆண்டனி, தியாகராஜன், சிபிராஜ், கவுதம் கார்த்திக், ராஜ் கிரண், யோகிபாபு, நடிகைகள் லதா, ரோகிணி, கோவை சரளா, குட்டி பத்மினி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ள சினிமா ஸ்டிரைக், நடிகர் நடிகைகள் சம்பள குறைப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆனாலும் எந்த ஒரு உறுதியான முடிவும் எடுக்காமல் கலைந்தது. விரைவில் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தனர்.