25வது நாளில் அடியெடுத்து வைத்த 'டூரிஸ்ட் பேமிலி' | ஹீரோக்களின் உதவியாளர்கள் கதை கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும் ; ஆர்கே செல்வமணி காட்டம் | தெலுங்கு படத்தில் சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிக்கும் உபேந்திரா | எனக்குள் புதிய விடியலை திறந்து விட்ட ஓஷோவின் பேச்சு ; மோகன்லால் | என் விளக்கத்தை அக்ஷய் குமார் படித்தால் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் ; படத்திலிருந்து விலகிய நடிகர் பதில் | 'அஞ்சலி' படம் பார்த்து அழுத சிலம்பரசன் | பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' |
கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கன்னட சினிமாவின் முன்னணி நடிகரான தர்ஷன் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்வது தொடர்பான வீடியோக்கள், படங்கள் வெளியானது. இதை தொடர்ந்து 9 சிறைத்துறை அதிகாரிகள் தற்காலிக வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக 3 வழக்குகள் பதிவாகி உள்ளது. இதனை விசாரிக்க 3 தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே போலீஸ் கமிஷனர் தயானந்த் நேற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்று திடீரென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், சிறை விதிமுறை மீறல் குறித்து விசாரணை நடத்தினார். இதை தொடர்ந்து பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள தர்ஷனை வேறு சிறைக்கு மாற்ற அனுமதிக்க கோரி கோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, ரேணுகாசாமி கொலையில் தொடர்புடைய தர்ஷன் உள்பட 10 பேரை வெவ்வேறு சிறைகளுக்கு மாற்ற அனுமதி வழங்கினார். தொடர்ந்து போலீசார் நடிகர் தர்ஷனை பல்லாரி சிறைக்கும் மற்றவர்ளை வேறு சிறைகளுக்கும் மாற்றினர்.