பிளாஷ்பேக் : சோக ராகங்கள் கூட சுக ராகங்களாக மாறும் எம்ஜிஆரின் பாடல்கள் | செப். 20ல் வேட்டையன் பட இசை வெளியீட்டு விழா | கார்த்தி 29வது படத்தை இயக்கும் டாணாக்காரன் பட இயக்குனர் | மீண்டும் இணைந்த செல்வராகவன் - ஜி.வி. பிரகாஷ் கூட்டணி! | மூக்குத்தி அம்மன் 2வை இயக்கும் சுந்தர் சி | ஜானி மாஸ்டரை கட்சியிலிருந்து நீக்கிய ஜனசேனா கட்சி | 'குட் பேட் அக்லி' படத்தில் விஜய்யின் வசனத்தை பேசி நடிக்கும் அஜித்! | அசோக்செல்வன் எப்படிப்பட்டவர்? உடைத்து பேசிய கீர்த்தி பாண்டியன்! | பாலிவுட்டில் வில்லனாக என்ட்ரி கொடுக்கும் சூர்யா? | 7 மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியாகும் லால் சலாம்! |
கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கன்னட சினிமாவின் முன்னணி நடிகரான தர்ஷன் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்வது தொடர்பான வீடியோக்கள், படங்கள் வெளியானது. இதை தொடர்ந்து 9 சிறைத்துறை அதிகாரிகள் தற்காலிக வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக 3 வழக்குகள் பதிவாகி உள்ளது. இதனை விசாரிக்க 3 தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே போலீஸ் கமிஷனர் தயானந்த் நேற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்று திடீரென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், சிறை விதிமுறை மீறல் குறித்து விசாரணை நடத்தினார். இதை தொடர்ந்து பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள தர்ஷனை வேறு சிறைக்கு மாற்ற அனுமதிக்க கோரி கோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, ரேணுகாசாமி கொலையில் தொடர்புடைய தர்ஷன் உள்பட 10 பேரை வெவ்வேறு சிறைகளுக்கு மாற்ற அனுமதி வழங்கினார். தொடர்ந்து போலீசார் நடிகர் தர்ஷனை பல்லாரி சிறைக்கும் மற்றவர்ளை வேறு சிறைகளுக்கும் மாற்றினர்.