‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
புகழ்பெற்ற காமெடி நடிகை சச்சு. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 70 வயதை கடந்தும் இப்போதும் நடித்து வருகிறார். இவர் மயிலாப்பூர் பொண்ணு. நடன கலை குடும்பம். இவரது சகோதரி மாடி லட்சுமி. இவரும் நடன கலைஞர் சினிமாவில் நடனம் ஆடி வந்ததோடு, குணசித்ர வேடங்களில் நடித்தும் வந்தார். மயிலாப்பூரில் தெருவுக்கு நான்கு லட்சுமி இருப்பதால் மாடி வீட்டில் குடியிருந்த இவரை மாடிலட்சுமி என்று அடையாளப்படுத்த அதுவே பெயராகி விட்டது.
ஏவிஎம் நிறுவனம் தயாரித்த 'ராணி' என்ற படத்தில் மாடி லட்சுமி நடித்தார். ஒரு நாள் அவர் சச்சுவை படப்பிப்புக்கு அழைத்துச் சென்றார். படத்தில் பானுமதி நாயகி, ஏ.எஸ்.ஏ.சாமி இயக்குனர். இவர்கள் போன நேரம் அன்று படப்பிடிப்புக்கு வரவேண்டிய ஒரு குழந்தை நட்சத்திரம் உடல்நலக்குறைவு காரணமாக வரவில்லை. உடனே நிலமையை சமாளிக்க இயக்குனர் சாமி வேடிக்கை பார்க்க வந்த சச்சுவை நடிக்க வைக்க முடிவு செய்தார்.
“அவளுக்கு சரியா பேசவே வராதுங்க” என்று மாடி லட்சுமி சொல்லி பார்த்தார். ஆனால் சாமி கேட்காமல் நடிக்க வைத்தார். இப்படித்தான் சச்சு நடிகை ஆனார். அதன்பிறகு 50க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சச்சு, பின்னர் நாயகியாகவும், காமெடி நடிகையாகவும் வலம் வந்தார்.
சச்சுவின் இயற்பெயர் சரஸ்வதி. ஆனால் வீட்டில் உள்ளவர்கள் அதை சுருக்கி சச்சு என்று அழைப்பாளர்கள். அன்றைக்கு சினிமாவில் ஏகப்பட்ட சரஸ்வதிகள் இருந்ததால் தன் பெயரை சச்சு என்றே வைத்துக் கொண்டார்.