என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
'கஸ்டடி' நடிகரான நாக சைதன்யா, 'பொன்னியின் செல்வன்' நடிகையான சோபிதா துலிபலா இருவருக்கும் அவர்களது பெற்றோர் சம்மதத்துடன் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நடிகை சமந்தாவுடனான திருமண உறவை முறித்துக் கொண்ட பின் நாக சைதன்யா, சோபிதாவைக் காதலிப்பதாக செய்திகள் வந்தன. அதை அவர்களது நிச்சயதார்த்தம் உறுதி செய்தது.
இந்நிலையில் நாக சைதன்யா, சோபிதா திருமணம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது. திருமணத்தை நீண்ட நாட்கள் தள்ளி வைக்க இருவரது குடும்பத்தினரும் விரும்பவில்லையாம். திருமண நிச்சயத்திற்குப் பிறகு மும்பையில் சோபிதா சென்ற போது அவரைப் புகைப்படமெடுத்த கலைஞர்கள் 'எப்போது பார்ட்டி' எனக் கேட்டுள்ளனர், அதற்கு விரைவில் என பதிலளித்துள்ளார் சோபிதா.
'டெஸ்டினேஷன்' திருமணமாக நடக்குமா அல்லது ஐதராபாத்தில் திருமணம் நடக்குமா என்பதும் விரைவில் தெரிந்துவிடும். நாக சைதன்யா, சமந்தாவின் திருமணம் 'டெஸ்டினேஷன்' திருமணமாக கோவாவில் நடைபெற்றது. அதனால், நாக சைதன்யா, சோபிதா திருமணம் ஹைதராபாத்தில் தான் நடக்கும் என்றும் சொல்கிறார்கள்.