'ஹிருதயபூர்வம்' முதல் கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த மாளவிகா மோகனன் | பா.ரஞ்சித்தின் சார்பட்டா பரம்பரை-2 கைவிடப்பட்டதா? | திருப்பதி கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த பிரபுதேவா! | நடிகை ரகுல் ப்ரீத் சிங் கணவரின் வீட்டில் குடியேறும் ஷாருக்கான்! | 'குட் பேட் அக்லி' படத்தின் மையக்கரு இதுதான்! - ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட தகவல் | சித்தார்த் - கியாரா திருமணத்தால் பல நாட்கள் அழுதேன் ; கிச்சா சுதீப் மகள் புது தகவல் | சல்மான்கான் குடும்பத்தினருடன் 'சிக்கந்தர்' படம் பார்த்த ஏ.ஆர் முருகதாஸ் | 'மிராஜ்' படப்பிடிப்பை நிறைவு செய்தார் ஜீத்து ஜோசப் | மோகன்லால் அறிமுக காட்சியே ரஜினியை மனதில் வைத்து உருவாக்கியதுதான் ; பிரித்விராஜ் | 8 வருடங்களுக்கு பிறகு மீண்டும் வரும் மனிஷா ஜஷ்னானி |
தமிழ் சினிமாவில் அடுத்த நான்கு மாதங்கள் மிகவும் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. “தி கோட், மெய்யழகன், கங்குவா, வேட்டையன், அமரன், விடாமுயற்சி,' என அடுத்தடுத்து சில பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாக உள்ளன.
அக்டோபர் 10ம் தேதி ரஜினிகாந்த் நடித்துள்ள 'வேட்டையன்', சூர்யா நடித்துள்ள 'கங்குவா' படங்கள் நேரடியாக மோத உள்ளன. இந்தப் போட்டியிலிருந்து 'கங்குவா' விலகுமா என்பது இனிமேல்தான் தெரிய வரும். அப்படி விலகாவிட்டால் போட்டி உறுதி.
தற்போது அதிகமான இளம் ரசிகர்களை வைத்துள்ள நடிகர்களுடன் போட்டி போடுவது என சீனியர் நடிகரான ரஜினிகாந்த் முடிவெடுத்துவிட்டார் என்றே திரையுலகில் சொல்கிறார்கள். வயசானாலும் தனக்கான வரவேற்பு குறையவில்லை என்பதை அவர் சொல்ல விரும்புகிறார் என்பதும் பேச்சாக உள்ளது.
சில தினங்களுக்கு முன்பு 'வேட்டையன்' பட ரிலீஸ் பற்றிய அப்டேட் வந்தது. அடுத்து முதல் சிங்கிளான 'மனசிலாயோ' பாடல் பற்றிய அப்டேட் ஒன்றை இசையமைப்பாளர் அனிருத் கொடுத்துள்ளார். விரைவில் அப்பாடல் வெளியாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இன்னும் இரண்டு வாரங்களில் விஜய்யின் 'தி கோட்' படம் வெளியாக உள்ள நிலையில் அதற்கு முன்பாகவே 'வேட்டையன்' முதல் சிங்கிள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தான் இசையமைத்த 'இந்தியன் 2' பாடலுக்கு பெரிய வரவேற்பு கிடைக்காத காரணத்தாலும் 'மனசிலாயோ' பாடலை அனிருத் அதிரடியாய் இசையமைத்திருப்பார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
மேலும், யுவன் இசையில் வந்த 'தி கோட்' படத்தின் பாடல்களை மிஞ்சும் விதத்தில் 'வேட்டையன்' பாடல்கள் அமைந்து சாதனை புரிய வேண்டும் என்பதும் அவர்களது எதிர்பார்ப்பாக உள்ளது.