படப்பிடிப்புக்கு முன்பே பின்னணி இசை : 'ஸ்பிரிட்'டில் புதிய முயற்சி | திருமணத்திற்கு பிறகு கவர்ச்சியாக நடிப்பதில் தவறில்லை : ரகுல் ப்ரீத் சிங் | சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி' | புகழ் படம் வந்ததே தெரியாது, பாலா படம் வந்தது தெரிகிறது…!! | மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம் | குறைந்த காட்சிகளுடன் 4வது வாரத்தில் 'கூலி' | அக்., 2ல் ஓடிடியில் வெளியாகும் ‛தி கேம்' வெப் தொடர் | நிவின்பாலிக்கு தமிழில் ரசிகர்கள் கிடைப்பார்களா? | சம்பளம் வாங்காமல் நடிப்பார் ஜி.வி.பிரகாஷ் | விஷால் திருமணத்துக்கு செல்வாரா மிஷ்கின் |
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் சென்னையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் பல்வேறு திடுக்கிடும் சம்பவங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. முக்கிய குற்றவாளிகள் பலரும் கைதாகி வருகின்றனர். தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் சினிமா இயக்குனர் நெல்சனின் மனைவி மோனிஷாவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த கொலையில் தொடர்புடைய ரவுடி சாம்போ செந்திலின் கூட்டாளியான மொட்டை கிருஷ்ணனுக்கு போனில் மோனிஷா பேசியதாகவும், அவருக்கு அடைக்கலம் தந்ததாகவும் கூறி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
மொட்டை கிருஷ்ணன் வக்கீல் என்பதால் தங்கள் வழக்கு தொடர்பாக மட்டுமே அவரிடம் பேசியதாக மோனிஷா தெரிவித்துள்ளாராம். மேலும் இவ்விவகாரம் தொடர்பாக இயக்குனர் நெல்சனிடம் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.