Advertisement

சிறப்புச்செய்திகள்

பிளாஷ்பேக் : சோக ராகங்கள் கூட சுக ராகங்களாக மாறும் எம்ஜிஆரின் பாடல்கள் | செப். 20ல் வேட்டையன் பட இசை வெளியீட்டு விழா | கார்த்தி 29வது படத்தை இயக்கும் டாணாக்காரன் பட இயக்குனர் | மீண்டும் இணைந்த செல்வராகவன் - ஜி.வி. பிரகாஷ் கூட்டணி! | மூக்குத்தி அம்மன் 2வை இயக்கும் சுந்தர் சி | ஜானி மாஸ்டரை கட்சியிலிருந்து நீக்கிய ஜனசேனா கட்சி | 'குட் பேட் அக்லி' படத்தில் விஜய்யின் வசனத்தை பேசி நடிக்கும் அஜித்! | அசோக்செல்வன் எப்படிப்பட்டவர்? உடைத்து பேசிய கீர்த்தி பாண்டியன்! | பாலிவுட்டில் வில்லனாக என்ட்ரி கொடுக்கும் சூர்யா? | 7 மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியாகும் லால் சலாம்! |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிளாஷ்பேக் : கண்களால் வென்ற ஜெய்சங்கர்

20 ஆக, 2024 - 01:57 IST
எழுத்தின் அளவு:
Flashback-:-Jaishankar-wins-with-his-eyes

தமிழ் சினிமாவின் முதல் ஸ்டைலிஷ் ஹீரோ ஜெய்சங்கர். பின்னாளில் தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட்டாக மாறினார். 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். ஆனால் அதே ஜெய்சங்கரை கண்கள் சிறிதாக இருப்பதாக கூறி புறக்கணிக்கப்பட்ட கதையும் உண்டு.

ஏ.வி.எம். நிறுவனம் சார்பில் 1962ம் ஆண்டு வெளியான படம் 'அன்னை'. எஸ்.வி.ரங்காராவ், சவுக்கார் ஜானகி, பானுமதி, சந்திரபாபு உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர். இந்த படத்தில், பானுமதியின் மகன் கேரக்டரில் நடிக்க முதலில் தேர்வானவர் ஜெய்சங்கர். ஆனால் ஜெய்சங்கரை நேரில் பார்த்த ஏவிஎம் செட்டியார் “இந்த பையனின் கண்கள் சின்னதாக இருக்கிறது. சினிமாவுக்கு சரிப்பட்டு வரமாட்டான்” என்று நிராகரித்து விட்டார். பின்னர் அந்த கேரக்டரில் ராஜா என்ற தெலுங்கு நடிகர் நடித்தார்.

அதன்பிறகு 1965ம் ஆண்டு 'இரவும் பகலும்' படத்தில் ஜெய்சங்கர் அறிமுகமானார். சின்ன கண்களை உடையவர் என்று புறக்கணிக்கப்பட்ட ஜெய்சங்கருக்கு அந்த கண்களால்தான் இரவும் பகலும் படத்தில் நடிக்கவே வாய்ப்பு கிடைத்தது. “அபூர்வமாகவே இது மாதிரி கண்கள் அமையும் அது உங்களுக்கு இருக்கிறது” என்று கூறி அறிமுகப்படுத்தினார் இயக்குனர் ஜோசப். அந்த படம் பெரிய வெற்றி பெற்றது. அதே ஆண்டு 5 படங்களில் நாயகனாக நடித்தார். தனது 3வது படத்திலேயே (பஞ்சவர்ணக்கிளி) இரட்டை வேடங்களில் நடித்திருந்தார்.

முதல் படத்தில் ஏ.வி.எம் நிறுவனத்தால் நிராகரிக்கப்பட்ட ஜெய்சங்கர், பின்னாளில் ஏ.வி.எம் தயாரித்த பல படங்களில் நாயகனாக நடித்தார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு : இயக்குனர் நெல்சன் மனைவியிடம் விசாரணைஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு : இயக்குனர் ... மீண்டும் இணைந்த 'கருடன்' கூட்டணி மீண்டும் இணைந்த 'கருடன்' கூட்டணி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in