22 வருடங்களுக்கு முன்பு தான் நடித்த கதாபாத்திரத்தில் இப்போது கேமியோவாக நடிக்கும் மம்முட்டி | கடைசியாக நடித்த படத்தில் நள்ளிரவு 2 மணிக்கு நடனமாடிய தர்மேந்திரா | இங்கு மட்டுமல்ல சவுதியிலும் 'ஜனநாயகன்' வெளியாவதில் சென்சார் சிக்கல் | தமிழில் கவனம் செலுத்தும் மலையாள நடிகர் அஜு வர்கீஸ் | சிரஞ்சீவி பட இயக்குனருக்கு மோகன்லால் கொடுத்த அதிர்ச்சி | சிவகார்த்திகேயன் திரையிலும், நிஜத்திலும் என் சகோதரர் : அதர்வா நெகிழ்ச்சி | 'ஹேப்பி ராஜ்' படப்பிடிப்பு நிறைவு | 'ஜனநாயகன்' தணிக்கை தாதமம், காரணம் என்ன ? | பிளாஷ்பேக்: மூன்று நட்சத்திரங்களின் திரைப் பிரவேசத்திற்கு வித்திட்ட “பட்டினப்பிரவேசம்” | மீண்டும் படம் இயக்க உள்ளேன்: பாக்யராஜ் பேட்டி |

சினிமாவின் ஆரம்பகால கட்டங்களில் நடிகை, தயாரிப்பாளர் என பெரிய ஆளுமையாக வலம் வந்தவர் அஞ்சலி தேவி, அந்தக் காலத்திலேயே அஞ்சலி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி 30க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்தவர். சினிமாவில் அவரை 'முதலாளியம்மா' என்று தான் அழைப்பார்கள்.
தமிழில் ஏராளமான படங்களை தயாரித்த அஞ்சலி தேவி 'பூங்கோதை' என்ற படத்தை தயாரித்தார். இந்த படத்தை எல்.வி.பிரசாத் இயக்கினார், நாகேஸ்வர ராவ் நாயகனாகவும், அஞ்சலி தேவி நாயகியாகவும் நடித்தனர். படம் தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழிகளிலும் வெளியானது. தெலுங்கில் படத்திற்கு 'பரதேசி' என்ற தலைப்பு வைத்திருந்தனர். எஸ்.வி.ரங்காராவ், டி.கே.ராமச்சந்திரன், பண்டரிபாய், சூர்யகாந்தம் உள்பட பலர் நடித்திருந்தனர், 1953ம் ஆண்டு படம் வெளியானது.
இந்த படத்தின் சிறப்பு என்னவென்றால் இந்த படத்தில் தான் நடிகர் திலகம் சிவாஜி அறிமுகமானார். அதாவது இரண்டாவது நாயகனாக நடித்தார். அப்போது சினிமா வாய்ப்பு தேடிக்கொண்டிருந்த சிவாஜி, அஞ்சலியை சந்தித்தும் வாய்ப்பு கேட்க அவர் கொடுத்த வாய்ப்பு தான் இது. ஆனால் இந்த படம் வெளிவர காலதாமதம் ஆனதால் சிவாஜி நடித்த 2வது படமான பராசக்தி முதலில் வெளியாகி அதுவே முதல்படம் ஆனது. பூங்கோதை படத்திற்காக சிவாஜி வாங்கிய சம்பளம் 101 ரூபாய்.