என்னது நான் ஹீரோவா... : டூரிஸ்ட் பேமிலி இயக்குனர் மறுப்பு | மாமன் படத்தை பின்பற்றும் '3BHK' | கல்லூரிகளில் படத்தை புரொமோஷன் செய்ய விருப்பமில்லை : சசிகுமார் | ரன்வீர் சிங் ஜோடியான சாரா அர்ஜுன் | 100 நாடுகள், 10 ஆயிரம் ஸ்கிரீன், 1000 கோடி சாதனை படைக்குமா ரஜினியின் கூலி | விஜய் பாணியை பின்பற்றினால் நல்லது: 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜூ | விரைவில் 'லக்கி பாஸ்கர் 2': வெங்கி அட்லூரி அப்டேட் | கூலி திரைப்படம் ஐமேக்ஸில் வெளியாவதில் புதிய சிக்கல்? | காமெடி நடிகரின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு 50 லட்சம் தர பிரபாஸ் வாக்குறுதி | படம் என்ன ஜானர் என்று ரிலீஸுக்கு முன்பே சொல்லிவிடுங்கள் ; சசிகுமார் வேண்டுகோள் |
சினிமாவின் ஆரம்பகால கட்டங்களில் நடிகை, தயாரிப்பாளர் என பெரிய ஆளுமையாக வலம் வந்தவர் அஞ்சலி தேவி, அந்தக் காலத்திலேயே அஞ்சலி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி 30க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்தவர். சினிமாவில் அவரை 'முதலாளியம்மா' என்று தான் அழைப்பார்கள்.
தமிழில் ஏராளமான படங்களை தயாரித்த அஞ்சலி தேவி 'பூங்கோதை' என்ற படத்தை தயாரித்தார். இந்த படத்தை எல்.வி.பிரசாத் இயக்கினார், நாகேஸ்வர ராவ் நாயகனாகவும், அஞ்சலி தேவி நாயகியாகவும் நடித்தனர். படம் தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழிகளிலும் வெளியானது. தெலுங்கில் படத்திற்கு 'பரதேசி' என்ற தலைப்பு வைத்திருந்தனர். எஸ்.வி.ரங்காராவ், டி.கே.ராமச்சந்திரன், பண்டரிபாய், சூர்யகாந்தம் உள்பட பலர் நடித்திருந்தனர், 1953ம் ஆண்டு படம் வெளியானது.
இந்த படத்தின் சிறப்பு என்னவென்றால் இந்த படத்தில் தான் நடிகர் திலகம் சிவாஜி அறிமுகமானார். அதாவது இரண்டாவது நாயகனாக நடித்தார். அப்போது சினிமா வாய்ப்பு தேடிக்கொண்டிருந்த சிவாஜி, அஞ்சலியை சந்தித்தும் வாய்ப்பு கேட்க அவர் கொடுத்த வாய்ப்பு தான் இது. ஆனால் இந்த படம் வெளிவர காலதாமதம் ஆனதால் சிவாஜி நடித்த 2வது படமான பராசக்தி முதலில் வெளியாகி அதுவே முதல்படம் ஆனது. பூங்கோதை படத்திற்காக சிவாஜி வாங்கிய சம்பளம் 101 ரூபாய்.