ரசிகர் மன்றம் எதற்கு... ஊரார் பிள்ளையை கெடுக்க விரும்பவில்லை : அரவிந்த்சாமி பளீச் | ரீல் அல்ல ரியல் : விபத்து ஏற்படுத்திய லாரியை சேஸிங் செய்து மடக்கிய நவ்யா நாயர் | விஜய் தவறான ரூட்டில் செல்கிறார் - மோகன்.ஜி வருத்தம் | ரூ.70 கோடி பட்ஜெட் படத்தில் ஆர்யா | இறுதிகட்ட கங்குவா பணியில் இணைந்த சூர்யா | விடாமுயற்சி படத்தில் இன்னும் ஒரு பாடல் காட்சி மீதம் | 'எமர்ஜென்சி' விவகாரம் : கங்கனாவிற்கு நீதிமன்றம் நோட்டீஸ் | பிளாஷ்பேக்: முதல் ஆக்ஷன் ஹீரோயின் | ஹிட்லர் கருத்து சொல்ல மாட்டார்: விஜய் ஆண்டனி | புற்று நோயாளிகளுக்கு உதவ இசை நிகழ்ச்சி நடத்தும் பரத்வாஜ் |
பழம்பெரும் நடிகர் டி.எஸ்.பாலையாவின் மகள் மனோசித்ரா. 1982ம் ஆண்டு வெளிவந்த 'மாதுளை முத்துக்கள்' என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் அவர் சுரேசுக்கு ஜோடியாக நடித்தார். படத்தை பி.எஸ்.வீரப்பா தயாரித்தார், கே.எம்.பாலகிருஷ்ணன் என்பவர் இயக்கி இருந்தார்.
அதன்பிறகு மனோசித்ரா, ஸ்ரீதரின் “ஒரு ஓடை நதியாகிறது” என்ற படத்தில் நடித்தார். தமிழ் படத்தில் போதிய வாய்ப்பு கிடைக்காததால் மலையாள சினிமாவுக்கு சென்றார். 1983-இல் “மழநிலாவு” என்ற படத்தில் பிரேம் நசீருடன் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து ஒரு பைங்கிளிக்கதா, ஈவழிமாத்ரம், திமிங்கிலம், ஸ்வந்தம்சாரிகா, உமாநிலையம், குருஜி ஒரு வாக்கு படங்களிலும், தெலுங்கில் பல படங்களிலும் நடித்தார்.
ஒருகட்டத்தில் வாய்ப்புகள் நின்றுவிடவே சிறிய இடைவெளிக்கு பிறகு தனது பெயரை 'கிருத்திகா' என்று மாற்றிக்கொண்டு 'அண்ணனுக்கு ஜே' என்ற படத்தின் மூலம் மீண்டும் அறிமுகமானார். அதன்பிறகும் பெரிதாக வாய்ப்புகள் அமையாததால் குணசித்ர வேடங்களில் நடிக்க தொடங்கினார். குறிப்பாக 2002ம் ஆண்டு வெளியான 'ஜெயம்' படத்தில் ஜெயம் ரவியின் அம்மாவாக நடித்தார்.