திருப்பதி அடிவாரத்தில் நடுரோட்டில் பிச்சை எடுக்க வைத்து விட்டார் சேகர் கம்முலா! வைரலாகும் தனுஷின் வீடியோ | ஜூனியர் என்டிஆர்-க்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த்! | கவர்ச்சிக்கு நோ சொல்லும் ரக்ஷிதா | மலேசியாவில் ஓய்வெடுக்கும் பாரதிராஜா | நெல் ஜெயராமன் மகனுக்கு உதவும் சிவகார்த்திகேயன் | ஆசியாவிலேயே மிகப்பெரிய செட் எது தெரியுமா? | விறுவிறுப்பாக நடந்து வரும் 'கூலி' வியாபாரம் | 'தக் லைப்' விவகாரம் : கன்னட அமைப்புகளுக்கு கர்நாடக துணை முதல்வர் வேண்டுகோள் | அதர்வாவுக்கு திருப்பத்தைத் தருமா 'டிஎன்ஏ'? | விமர்சனங்களால் கவலையில்லை.. கடைசி காலத்தில் இதை பார்த்து மகிழ்வேன் : அஜித் பேட்டி |
பழம்பெரும் நடிகர் டி.எஸ்.பாலையாவின் மகள் மனோசித்ரா. 1982ம் ஆண்டு வெளிவந்த 'மாதுளை முத்துக்கள்' என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் அவர் சுரேசுக்கு ஜோடியாக நடித்தார். படத்தை பி.எஸ்.வீரப்பா தயாரித்தார், கே.எம்.பாலகிருஷ்ணன் என்பவர் இயக்கி இருந்தார்.
அதன்பிறகு மனோசித்ரா, ஸ்ரீதரின் “ஒரு ஓடை நதியாகிறது” என்ற படத்தில் நடித்தார். தமிழ் படத்தில் போதிய வாய்ப்பு கிடைக்காததால் மலையாள சினிமாவுக்கு சென்றார். 1983-இல் “மழநிலாவு” என்ற படத்தில் பிரேம் நசீருடன் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து ஒரு பைங்கிளிக்கதா, ஈவழிமாத்ரம், திமிங்கிலம், ஸ்வந்தம்சாரிகா, உமாநிலையம், குருஜி ஒரு வாக்கு படங்களிலும், தெலுங்கில் பல படங்களிலும் நடித்தார்.
ஒருகட்டத்தில் வாய்ப்புகள் நின்றுவிடவே சிறிய இடைவெளிக்கு பிறகு தனது பெயரை 'கிருத்திகா' என்று மாற்றிக்கொண்டு 'அண்ணனுக்கு ஜே' என்ற படத்தின் மூலம் மீண்டும் அறிமுகமானார். அதன்பிறகும் பெரிதாக வாய்ப்புகள் அமையாததால் குணசித்ர வேடங்களில் நடிக்க தொடங்கினார். குறிப்பாக 2002ம் ஆண்டு வெளியான 'ஜெயம்' படத்தில் ஜெயம் ரவியின் அம்மாவாக நடித்தார்.