'வாரணாசி' முன்னோட்ட வரவேற்பு: ராஜமவுலியின் நன்றி | மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! |

பழம்பெரும் நடிகர் டி.எஸ்.பாலையாவின் மகள் மனோசித்ரா. 1982ம் ஆண்டு வெளிவந்த 'மாதுளை முத்துக்கள்' என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் அவர் சுரேசுக்கு ஜோடியாக நடித்தார். படத்தை பி.எஸ்.வீரப்பா தயாரித்தார், கே.எம்.பாலகிருஷ்ணன் என்பவர் இயக்கி இருந்தார்.
அதன்பிறகு மனோசித்ரா, ஸ்ரீதரின் “ஒரு ஓடை நதியாகிறது” என்ற படத்தில் நடித்தார். தமிழ் படத்தில் போதிய வாய்ப்பு கிடைக்காததால் மலையாள சினிமாவுக்கு சென்றார். 1983-இல் “மழநிலாவு” என்ற படத்தில் பிரேம் நசீருடன் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து ஒரு பைங்கிளிக்கதா, ஈவழிமாத்ரம், திமிங்கிலம், ஸ்வந்தம்சாரிகா, உமாநிலையம், குருஜி ஒரு வாக்கு படங்களிலும், தெலுங்கில் பல படங்களிலும் நடித்தார்.
ஒருகட்டத்தில் வாய்ப்புகள் நின்றுவிடவே சிறிய இடைவெளிக்கு பிறகு தனது பெயரை 'கிருத்திகா' என்று மாற்றிக்கொண்டு 'அண்ணனுக்கு ஜே' என்ற படத்தின் மூலம் மீண்டும் அறிமுகமானார். அதன்பிறகும் பெரிதாக வாய்ப்புகள் அமையாததால் குணசித்ர வேடங்களில் நடிக்க தொடங்கினார். குறிப்பாக 2002ம் ஆண்டு வெளியான 'ஜெயம்' படத்தில் ஜெயம் ரவியின் அம்மாவாக நடித்தார்.