நகைச்சுவை வேடத்தில் நடிக்க சிரமப்பட்ட மீனாட்சி சவுத்ரி | இரண்டு நாளில் ரூ.51 கோடி வசூலித்த ‛பராசக்தி' : நாளை நன்றி அறிவிப்பு விழா | ஜனநாயகனுக்கு தொடரும் சிக்கல் : தணிக்கை வாரியம் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் | சிறுவயது பாலியல் துன்புறுத்தல்: 'மரியான்' படப்பிடிப்பில் அசவுகரியம்: பார்வதி 'ஓபன் டாக்' | சுதா கொங்கரா இயக்கத்தில் அடுத்து நடிக்கபோவது சிம்புவா? துருவ் விக்ரமா? | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு பொங்கலுக்கு வெளியாகிறது | அமெரிக்காவில் ஒரு மில்லியன் பிரிமியர் வசூலை தாண்டிய சிரஞ்சீவியின் படம் | பொங்கல் விழாவை கொண்டாட வராத அட்டகத்தி தினேஷ் | வணிக நோக்கில் கமல் பெயர், புகைப்படம் பயன்படுத்த தடை | கதை நாயகியாக நடிக்கும் வடிவுக்கரசி |

கடந்த 2018ம் ஆண்டு ஹிந்தியில் தடக் என்ற படத்தில் அறிமுகமானவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்விகபூர். தொடர்ந்து ரோகி, குட்லக், ஜெர்ரி ஆகிய படங்களில் நடித்தார். தற்போது தெலுங்கில் தேவரா என்ற படத்தில் ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதையடுத்து தமிழில் நடிப்பதற்கும் சரியான கதைகளை தேடி வருகிறார் ஜான்வி கபூர்.
இந்த நிலையில் அவர் அளித்த ஒரு பேட்டியில், நான் நடிக்கும் படங்களுக்காக எவ்வளவு கஷ்டப்படுவதற்கும் தயாராக இருக்கிறேன். ஆனால் எக்காரணம் கொண்டும் தலையில் மொட்டை அடித்து மட்டும் நடிக்கவே மாட்டேன். அந்த கதாபாத்திரத்துக்காக ஆஸ்கார் விருது கிடைக்கும் என்று சொன்னால் கூட இதை நான் செய்ய மாட்டேன். காரணம் என்னுடைய அம்மா எனது நீண்ட தலைமுடிக்காக அதிக அக்கறை எடுத்துக் கொண்டார். நான்கு நாட்களுக்கு ஒரு முறை தலையில் எண்ணெய் வைத்து மசாஜ் செய்வார். என் தலை முடியை பராமரிப்பதில் அவர் அந்த அளவுக்கு கவனம் செலுத்தினார். அதன் காரணமாகவே நான் முதல் படத்தில் நடிப்பதற்கு எனது தலைமுடியை சிறிய அளவில் வெட்டியபோது அவர் ரொம்பவே கோபப்பட்டார். அதன் காரணமாகவே என் அம்மாவைப் போலவே நானும் எனது தலைமுடியை பராமரிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறேன் என்கிறார் ஜான்வி கபூர்.




