பிளாஷ்பேக் : சோக ராகங்கள் கூட சுக ராகங்களாக மாறும் எம்ஜிஆரின் பாடல்கள் | செப். 20ல் வேட்டையன் பட இசை வெளியீட்டு விழா | கார்த்தி 29வது படத்தை இயக்கும் டாணாக்காரன் பட இயக்குனர் | மீண்டும் இணைந்த செல்வராகவன் - ஜி.வி. பிரகாஷ் கூட்டணி! | மூக்குத்தி அம்மன் 2வை இயக்கும் சுந்தர் சி | ஜானி மாஸ்டரை கட்சியிலிருந்து நீக்கிய ஜனசேனா கட்சி | 'குட் பேட் அக்லி' படத்தில் விஜய்யின் வசனத்தை பேசி நடிக்கும் அஜித்! | அசோக்செல்வன் எப்படிப்பட்டவர்? உடைத்து பேசிய கீர்த்தி பாண்டியன்! | பாலிவுட்டில் வில்லனாக என்ட்ரி கொடுக்கும் சூர்யா? | 7 மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியாகும் லால் சலாம்! |
கடந்த 2018ம் ஆண்டு ஹிந்தியில் தடக் என்ற படத்தில் அறிமுகமானவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்விகபூர். தொடர்ந்து ரோகி, குட்லக், ஜெர்ரி ஆகிய படங்களில் நடித்தார். தற்போது தெலுங்கில் தேவரா என்ற படத்தில் ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதையடுத்து தமிழில் நடிப்பதற்கும் சரியான கதைகளை தேடி வருகிறார் ஜான்வி கபூர்.
இந்த நிலையில் அவர் அளித்த ஒரு பேட்டியில், நான் நடிக்கும் படங்களுக்காக எவ்வளவு கஷ்டப்படுவதற்கும் தயாராக இருக்கிறேன். ஆனால் எக்காரணம் கொண்டும் தலையில் மொட்டை அடித்து மட்டும் நடிக்கவே மாட்டேன். அந்த கதாபாத்திரத்துக்காக ஆஸ்கார் விருது கிடைக்கும் என்று சொன்னால் கூட இதை நான் செய்ய மாட்டேன். காரணம் என்னுடைய அம்மா எனது நீண்ட தலைமுடிக்காக அதிக அக்கறை எடுத்துக் கொண்டார். நான்கு நாட்களுக்கு ஒரு முறை தலையில் எண்ணெய் வைத்து மசாஜ் செய்வார். என் தலை முடியை பராமரிப்பதில் அவர் அந்த அளவுக்கு கவனம் செலுத்தினார். அதன் காரணமாகவே நான் முதல் படத்தில் நடிப்பதற்கு எனது தலைமுடியை சிறிய அளவில் வெட்டியபோது அவர் ரொம்பவே கோபப்பட்டார். அதன் காரணமாகவே என் அம்மாவைப் போலவே நானும் எனது தலைமுடியை பராமரிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறேன் என்கிறார் ஜான்வி கபூர்.