எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
கடந்த 2018ம் ஆண்டு ஹிந்தியில் தடக் என்ற படத்தில் அறிமுகமானவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்விகபூர். தொடர்ந்து ரோகி, குட்லக், ஜெர்ரி ஆகிய படங்களில் நடித்தார். தற்போது தெலுங்கில் தேவரா என்ற படத்தில் ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதையடுத்து தமிழில் நடிப்பதற்கும் சரியான கதைகளை தேடி வருகிறார் ஜான்வி கபூர்.
இந்த நிலையில் அவர் அளித்த ஒரு பேட்டியில், நான் நடிக்கும் படங்களுக்காக எவ்வளவு கஷ்டப்படுவதற்கும் தயாராக இருக்கிறேன். ஆனால் எக்காரணம் கொண்டும் தலையில் மொட்டை அடித்து மட்டும் நடிக்கவே மாட்டேன். அந்த கதாபாத்திரத்துக்காக ஆஸ்கார் விருது கிடைக்கும் என்று சொன்னால் கூட இதை நான் செய்ய மாட்டேன். காரணம் என்னுடைய அம்மா எனது நீண்ட தலைமுடிக்காக அதிக அக்கறை எடுத்துக் கொண்டார். நான்கு நாட்களுக்கு ஒரு முறை தலையில் எண்ணெய் வைத்து மசாஜ் செய்வார். என் தலை முடியை பராமரிப்பதில் அவர் அந்த அளவுக்கு கவனம் செலுத்தினார். அதன் காரணமாகவே நான் முதல் படத்தில் நடிப்பதற்கு எனது தலைமுடியை சிறிய அளவில் வெட்டியபோது அவர் ரொம்பவே கோபப்பட்டார். அதன் காரணமாகவே என் அம்மாவைப் போலவே நானும் எனது தலைமுடியை பராமரிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறேன் என்கிறார் ஜான்வி கபூர்.