மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

தெலுங்கு இளம் முன்னணி நடிகர் நாக சைதன்யா மற்றும் அவரது காதல் மனைவி நடிகை சமந்தா இருவரும் தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதன் பிறகு கடந்த இரண்டு வருடங்களாக பொன்னியின் செல்வன் நடிகை சோபிதா துலிபாலாவுடன் நாகசைதன்யா காதலில் விழுந்துள்ளதாக பலமுறை பரபரப்பு செய்திகளில் அடிபட்டார். இந்த நிலையில் அதை உறுதிப்படுத்தும் விதமாக சமீபத்தில் இவர்கள் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. வெகு விரைவில் இவர்களது திருமணமும் நடைபெற இருக்கிறது.
அதே சமயம் ஆந்திராவைச் சேர்ந்த ஜோதிடரான வேணு சுவாமி என்பவர் நாகசைதன்யா - சோபிதா ஜோடி 2027க்குள் பிரிந்து விடுவார்கள் என்றும் அதற்கும் ஒரு பெண் காரணமாக இருப்பார் என்றும் ஜோதிடம் கணித்துக் கூறியது சலசலப்பையையும் சர்ச்சையும் ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து அவர் மீது அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பெண்கள் உரிமை ஆணையம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இது ஒரு பக்கம் இருக்க இந்த ஜோதிடரின் மனைவியான வீணா என்பவர் தனது சோசியல் மீடியா பக்கத்தில் நாகசைதன்யா-சோபிதா ஜோடிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதுடன், நீங்கள் இருவரும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் இவர்கள் நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்ததற்காக நாகசைதன்யா தனக்கு மிகப்பெரிய பரிசு ஒன்றை தர வேண்டும் என்று பகிரங்கமான கோரிக்கை ஒன்றையும் வைத்துள்ளார். தனது கணவரின் சர்ச்சை பேச்சை திசை திருப்பி அந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவே இவர் இப்படி நாகசைதன்யாவுக்கு ஐஸ் வைக்கும் விதமாக பேசி உள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.




