சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி மற்றும் பலர் நடிக்கும் 'தங்கலான்' படம் நாளை(ஆக., 14) வெளியாக உள்ளது. பாலா இயக்கத்தில் வந்த 'சேது' படம் விக்ரமிற்கும், பாலா இயக்கத்தில் வந்த 'நந்தா' படம் சூர்யாவுக்கும் தமிழ் சினிமா உலகில் அவர்களது பயணத்திற்கு மிகப் பெரும் திருப்புமுனையாக அமைந்த படங்கள். அதற்கடுத்து விக்ரம், சூர்யா இருவரும் பாலா இயக்கத்தில் வெளிவந்த 'பிதாமகன்' படத்தில் இணைந்து நடித்தார்கள்.
அதன் பின் விக்ரம், சூர்யா இடையே சில தனிப்பட்ட காரணங்களால் பிரிவு ஏற்பட்டது. இருவரும் பேசிக் கொள்வதும் கிடையாது. இந்நிலையில் சூர்யாவின் உறவினரான கேஈ ஞானவேல் ராஜா தயாரிப்பில் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' படம் பற்றிய அறிவிப்பு வந்த போது திரையுலகினர் ஆச்சரியப்பட்டார்கள்.
கடந்த வாரம் நடைபெற்ற 'தங்கலான்' இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிவக்குமார் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்திருந்தார். நாளை வெளியாக உள்ள படத்திற்கு தற்போது சூர்யா வாழ்த்து தெரிவித்துள்ளார். படக்குழுவினரை டேக் செய்து 'தங்கலான்… இந்த வெற்றி மிகப் பெரியதாக இருக்கும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.