படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

மலையாளத்தில் சுமார் 350 படங்களுக்கு மேல் நடித்துவிட்ட முன்னணி நடிகர் மோகன்லால் முதன் முறையாக இயக்குனராக மாறி பரோஸ் என்கிற படத்தை இயக்கியுள்ளார். மைடியர் குட்டி சாத்தான் படத்திற்கு கதை எழுதிய ஜிஜோ பொன்னூஸ் தான் இந்த படத்திற்கும் கதை எழுதியுள்ளார். இந்த படத்தை இயக்கியுள்ளதுடன் பரோஸ் என்கிற முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார் மோகன்லால்.
இது வாஸ்கோடகாமா இந்தியாவிற்கு வந்த காலத்தில் அவர் சம்பாதித்த சொத்துக்களை சேர்த்து வைப்பதற்காக நியமிக்கப்பட்ட ஒரு பாதுகாவலர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் வரும் ஓணம் பண்டிகை ரிலீஸாக தயாராகி வருகிறது. இந்த நிலையில் ஜெர்மனி வாழ் இந்தியரும், கேரளாவை சேர்ந்த மலையாள எழுத்தாளரான ஜார்ஜ் துண்டிப்பரம்பில் என்பவர், இந்த படத்தின் கதை தான் எழுதிய நாவலின் காட்சிகளை தழுவி எடுக்கப்பட்டுள்ளதாக கூறி குற்றம் சாட்டியுள்ளார்.
ஆனால் இந்தக் கதை இந்த படத்தின் கதாசிரியரான ஜிஜோ பொன்னூஸ் எழுதிய நாவலை தழுவி எடுக்கப்பட்டது என்று சொல்லப்படுகிறது. தற்போது குற்றம் சாட்டியுள்ள ஜார்ஜ் துண்டிப்பாரம்பில் 2009ல் தான் எழுதிய மாயா என்கிற நாவலை தழுவி, அதில் எழுதப்பட்டுள்ள கப்பிரி முத்தப்பன் என்கிற கதாபாத்திரத்தை அப்படியே இந்த படத்தில் பயன்படுத்தி உள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். படம் வெளியாக ஒரு மாதமே இருக்கும் நிலையில், ஏற்கனவே பலமுறை ரிலீஸ் தேதி மாற்றப்பட்ட இந்த பரோஸ் திரைப்படம், இந்த புதிய பிரச்சினையை சரி செய்து குறித்த தேதியில் வெளியாகுமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.