ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! | தனுசை ஆச்சரியப்பட வைத்த இயக்குனர் விக்னேஷ் ராஜா! | 96 பட இயக்குனரிடம் கதை கேட்ட நானி | லிங்குசாமி, சரண் புதிய படத்திற்காக கூட்டணி | இதெல்லாம் டிசம்பர் மாதம் ரிலீஸ் : ரிசல்ட் எப்படி இருக்குமோ? | சின்மயி மன்னிப்பு : இயக்குனர் பேரரசு பதிலடி | கைவசம் 3 படங்கள் : தமிழில் கால் பதிக்க நினைக்கிறார் கிர்த்தி ஷெட்டி | கிண்டல், கேலி, நெகட்டிவ் எண்ணம் : சமூக வலைதளங்களை தவிர்க்கும் திரைபிரபலங்கள் |

விஜய் கடந்த பிப்ரவரி மாதம் 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கினார். கட்சியின் கொள்கைகள், நோக்கங்கள் செயல்பாடுகள் பற்றி கட்சியின் முதல் மாநாட்டில் அறிவிக்கப்படும் என்று விஜய் கூறிவந்தார்.
முதல் மாநாட்டை எங்கு நடத்தலாம் என்று கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆய்வு செய்து வந்தார். பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப் பயணம் செய்து தொண்டர்கள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் தற்போது மாநாட்டை திருச்சியில் நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள். தமிழ் நாட்டின் மைய பகுதியாக திருச்சி இருப்பதாலும், வரலாற்ற சிறப்பு மிக்க பல அரசியல் மாநாடுகள் திருச்சியில் நடந்திருப்பதாலும் திருச்சியை தேர்வு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இதையடுத்து விஜய் கட்சி நிர்வாகிகள் திருச்சி பொன்மலை ஜி.கார்னர் மைதானத்தில் மாநாடு நடத்த அனுமதி கேட்டு திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் விண்ணப்பம் செய்துள்ளனர். அந்த விண்ணப்பத்தில் செப்டம்பர் மாதம் 20ம் தேதி முதல் 24ம் தேதிக்குள் மாநாடு நடத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. சரியாக தேதியை குறிப்பிட்டு விண்ணப்பிக்குமாறு ரெயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




