ஜனநாயகன் மறு தணிக்கை 2வது முறை ரத்து | மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி உடைகிறதா? | நயன்தாராவை உட்படுத்தி சர்ச்சை கருத்து: நடிகர் சங்கம் கண்டனம் | மோகன்லாலின் 'திரிஷ்யம்-3' படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்! | திரிஷா மிகவும் கண்ணியமானவர்! -சொல்கிறார் குஷ்பு | 100 கோடியை எட்டிப்பிடிக்குமா ராதிகா சரத்குமாரின் 'தாய் கிழவி'? | ரஜினிகாந்த் Vs விஜய் : வெளிப்படை மோதல் ஆரம்பம் | நயன்தாரா பற்றி சர்ச்சை பேச்சு : வருத்தம் தெரிவித்த சிவி சண்முகம் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே பாலசந்தரை நிரந்தர சினிமா இயக்குநராக மாற்றிய “நீர்க்குமிழி” | 'சேயோன்' படத்தில் 'விருமாண்டி'-ஆக தொடரும் கமல்ஹாசன் |

விஜய் கடந்த பிப்ரவரி மாதம் 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கினார். கட்சியின் கொள்கைகள், நோக்கங்கள் செயல்பாடுகள் பற்றி கட்சியின் முதல் மாநாட்டில் அறிவிக்கப்படும் என்று விஜய் கூறிவந்தார்.
முதல் மாநாட்டை எங்கு நடத்தலாம் என்று கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆய்வு செய்து வந்தார். பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப் பயணம் செய்து தொண்டர்கள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் தற்போது மாநாட்டை திருச்சியில் நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள். தமிழ் நாட்டின் மைய பகுதியாக திருச்சி இருப்பதாலும், வரலாற்ற சிறப்பு மிக்க பல அரசியல் மாநாடுகள் திருச்சியில் நடந்திருப்பதாலும் திருச்சியை தேர்வு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இதையடுத்து விஜய் கட்சி நிர்வாகிகள் திருச்சி பொன்மலை ஜி.கார்னர் மைதானத்தில் மாநாடு நடத்த அனுமதி கேட்டு திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் விண்ணப்பம் செய்துள்ளனர். அந்த விண்ணப்பத்தில் செப்டம்பர் மாதம் 20ம் தேதி முதல் 24ம் தேதிக்குள் மாநாடு நடத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. சரியாக தேதியை குறிப்பிட்டு விண்ணப்பிக்குமாறு ரெயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.